பார்லரை வித்தத ஏன் சொல்லலை.. ரோகிணியிடம் முத்து கேட்காத கேள்வியை கேட்கும் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Monday,March 04 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து தனது நண்பர்களுக்காக காரை விற்ற நிலையில் அந்த காரை ஏன் விற்றாய் என ரோகிணி, மனோஜ், விஜயா என மாறி மாறி கேட்க முத்து திருப்பி கேட்க மறந்த ஒரு கேள்வியை இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் பார்வையாளர்கள் கேட்டு வருகின்றனர்.

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து தனது காரை விற்று தனது நண்பர்களின் கடனை அடைத்து விட்டார். காரை விற்றதை வீட்டில் சொல்லாமல் மறைத்து தற்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் நிலையில் ரோகிணி தற்செயலாக அவர் ஆட்டோ ஓட்டுவதை பார்த்து விஜயாவிடம் போட்டு கொடுத்து விடுகிறார்.

விஜயா உடனே தனது கணவர் அண்ணாமலையிடம் இது குறித்து கேட்க, அப்போது மீனாவிடமும் விஜயா இது குறித்து கேட்கிறார். ஆனால் மீனா தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல அப்போது முத்து வரும்போது முத்துவிடம் அண்ணாமலை காரை ஏன் விற்றாய் என்று கேட்கிறார்.

காரை விற்றதற்கான காரணத்தை இப்போது சொல்ல முடியாது என்றும் ஆனால் கண்டிப்பாக ஒருநாள் உங்களிடம் சொல்கிறேன் என்று முத்து கூறுகிறார். அப்போது விஜயா இது என்னுடைய வீடு, என்னுடைய வீட்டை அடமானம் வைத்து தான் காரை வாங்கி கொடுத்தேன், நீ காரை விற்றிருந்தால் அந்த பணத்தை என்னிடம் தானே கொடுத்திருக்க வேண்டும் என்று கேட்க, உடனே முத்து, ‘மனோஜ் தூக்கிட்டு போன 27 லட்ச ரூபாயை கொடுக்க சொல்லுங்க, அதற்கு அடுத்த நிமிடமே நானும் தருகிறேன் என்று கூறி அவருடைய வாயை அடைகிறார்.

இதனை அடுத்து ரோகிணி குறித்தும் சாடைமாடையாக முத்து சில விஷயங்களை பேசினாலும் முக்கியமான ஒன்றைக் கேட்க மறந்துவிட்டதாக பார்வையாளர்கள் இந்த சீரியல் குழுவினருக்கு ஞாபகப்படுத்தி உள்ளனர். என்னுடைய காரை விற்றதை மட்டும் வீட்டில் வந்து போட்டு கொடுத்தாயே, நீ உன்னுடைய பார்லர் விற்றுவிட்டு, அதே பார்லரில் சம்பளத்துக்கு தானே வேலை செய்கிறாய்? அதை ஏன் வீட்டில் சொல்லவில்லை? பார்லரை விற்ற காசை ஏன் வீட்டில் கொடுக்கவில்லை? என்று கேள்வியை முத்து கேட்டிருக்கலாம் என்றும் இந்த கேள்வியை அவர் கேட்க இது சரியான நேரம் என்றும் ஆனால் முத்து கேட்காது ஏன் என்று தெரியவில்லை என்றும் இந்த சீரியலை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த தகவலை ‘சிறகடிக்க ஆசை’ கதை ஆசிரியர்கள் கவனிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஐஸ்கட்டி தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம்.. 'தெறி' நடிகையின் வைரல் வீடியோ..!

விஜய் நடித்த 'தெறி' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஐஸ் கட்டி தொட்டிக்குள் உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள

வெள்ளம் நேரத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்த ரசிகர்களுக்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் அதன் பிறகு சில நாட்கள் கழித்து தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மஞ்சுமெல் பாய்சுக்கு கிடைத்த ஆதரவு எனக்கு கிடைக்கலையே.. அதே நாளில் ரிலீசான படத்தின் இயக்குநர் ஆதங்கம்!

மலையாளத் திரைப்படமான 'மஞ்சுமெல் பாய்ஸ்' என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

'குணா' குகையில் கண்டெடுத்ததை 'ஹேராம்' படத்தில் பயன்படுத்தினேன்: கமல்ஹாசன்

'குணா' குகையில் கண்டெடுத்த 3 குரங்கு எலும்புக்கூடுகளை 'ஹேராம்' படத்தில் பயன்படுத்தினேன் என கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

 'தி கேரளா ஸ்டோரி': ஓடிடியில் 300 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை !!

சமீபத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தினை, உலகளவில்  ZEE5 தளம் டிஜிட்டல் வெளியீடு செய்தது. இப்படம் தென்னிந்தியப் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்துள்ளது.