பிரபல பாடகிக்கு ஆண்குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்

தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் திரைப்பட பாடல்கள் பாடிய பிரபல பாடகிக்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் முன்னணி பாடகியாக இருந்து வருபவர்களில் ஒருவர் ஸ்ரேயா கோஷல். இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷைலாதித்யா முகோபாத்யா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஷ்ரேயா கோஷல் கர்ப்பம் ஆனதை அடுத்து தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கர்ப்பமான தனது புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரேயா கோஷலுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘கடவுள் அருளால் இன்று எனக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான தருணத்தை நான் இதற்கு முன்பு அடைந்தது இல்லை. நானும் எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அளவு கடந்த மகிழ்ச்சியில் உள்ளோம். அனைவருடைய வாழ்த்துக்களுக்கு நன்றி’ என கூறியுள்ளார். இதனை அடுத்து ஸ்ரேயா கோஷலுக்கும் அவருடைய குழந்தைக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.