close
Choose your channels

இமயமலை ரிஷிகேஷில் தொழிலதிபரை திருமணம் செய்த பாடகி!

Saturday, March 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடகி இமயமலை ரிஷிகேஷ் பகுதியில் பெங்களூர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை மாயா கிருஷ்ணாவின் சகோதரியும் பாடகியுமான ஸ்வாகதா கிருஷ்ணா பெங்களூர் தொழில் அதிபர் அக்ஷய் குமார் என்பவரை மார்ச் 4ஆம் தேதி இமயமலை அடிவாரத்தில் உள்ள கங்கை நதி பகுதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் உற்றார் உறவினர்கள் மற்றும் மிக நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள கிருஷ்ணா தனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் .

பாடகியாக மட்டுமின்றி ஸ்வாகதா கிருஷ்ணா ஒரு திரைப்படத்தில் நடிகையாகவும் அறிமுகமாக இருக்கிறார் என்பதும் அவரும் அவருடைய சகோதரி மாயா கிருஷ்ணாவும் இணைந்து ‘இண்ட்ரா’ என்ற என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் லியோ விஜயன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment