பிரபல பாடகிக்கு போனில் தொல்லை கொடுத்த மர்ம நபர்கள்: சைபர் க்ரைமில் புகார்!

  • IndiaGlitz, [Monday,May 24 2021]

பிரபல பாடகியும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மதுப்பிரியாவுக்கு தொலைபேசியில் மர்ம நபர்கள் தொல்லை கொடுத்ததை அடுத்து மர்ம நபர்கள் மீது அவர் புகார் அளித்துள்ளார், இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

பிக்பாஸ் தெலுங்கு சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாடகி மதுப்பிரியா. ஆனால் இவர் முதல் நபராக 13 நாட்களில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் மதுப்ப்ரியாவுக்கு சமூக வலைத்தளங்களில் தொல்லை தரும் மெசேஜ்கள் அடிக்கடி வந்து உள்ளன. மேலும் அவரது போனுக்கு மர்ம நபர்கள் சிலர் போன் செய்து தொல்லை செய்ததாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அவர் ஹைதராபாத் காவல் நிலையத்தில் உள்ள சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகி மதுப்ப்ரியா தூரங்கா, பிடா, டச் சேசி சுடு, நேலா டிக்கட், சாக்‌ஷியம் மற்றும் சரிலேறு நீகவரு உள்ளிட்ட தெலுங்கு படங்களில் பாடல்கள் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மெல்லிசான டிரான்ஸ்பிரண்ட் உடையில் விஜய் பட நாயகி… கோடிகளில் குவியும் லைக்ஸ்!

கடந்த 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த “தமிழன்” திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

புதிதாக உருவான மஞ்சை பூஞ்சை தொற்று....!அறிகுறிகள் என்ன..? தடுப்பது எப்படி...?

கடும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மஞ்சள்  பூஞ்சை  தொற்று என்ற புதிய நோய் உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

குளுகுளு PPE kid … கல்லூரி மாணவரின் அசத்தும் கண்டுபிடிப்பு!

கொரோனா நேரத்தில் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள்,

ஆபாச சேட்டை செய்த ஆசிரியர்....! தக்க பதிலடி கொடுத்த மாணவர்கள்...!

சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக, அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

முகம் காட்டாமல் உதவும் மாமனிதர்...! தூத்துக்குடியில் செழிக்கும் மனிதநேயம்....!

கொரோனா நோயால் உலகமே ஸ்தம்பித்து போயிருக்கிறது என்று சொல்லலாம். இக்கட்டான சூழலிலும்