close
Choose your channels

மாஸ் நடிகர்களின் மெளனம் ஏன்? சின்மயி விவகாரம் குறித்து தமிழிசை கேள்வி

Thursday, October 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரசியல்வாதி குறித்து அடிக்கடி விமர்சனம் செய்யும் திரையுலகில் உள்ள மாஸ் நடிகர்கள், வைரமுத்து விவகாரம் குறித்து மெளனமாக இருப்பது ஏன்? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்திலும் ஆங்கில ஊடகங்களிலும் தனக்கு வைரமுத்துவால் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்த குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார். சின்மயிக்கு சமந்தா, வரலட்சுமி, உள்பட பல முன்னணி நடிகைகள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆனால் அரசியல்வாதிகளை அடிக்கடி விமர்சனம் செய்து வரும் மாஸ் நடிகர்கள் இந்த விஷயத்தில் அமைதி காத்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது. நிச்சயம். விசாரிக்கப்படவேண்டியது. அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கம்போல் தமிழிசையின் இந்த கருத்துக்கும் நெட்டிசன்களிடம் இருந்து ஆதரவும் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment