நாங்கள் கொடுத்த புகார் என்ன ஆயிற்று? காசி வழக்கை சுட்டிக்காட்டி சின்மயி கேள்வி

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞன் தன்னை தொழிலதிபர் என்று கூறிக் கொண்டும் வழக்கறிஞர் என்று கூறிக் கொண்டும் விமான ஓட்டுநர் பயிற்சியாளர் என்று கூறி, பல பெண்களை ஏமாற்றி அவர்களுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளார் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து பெண் டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காசி கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவரும் கல்லூரி மாணவிகள் சிலரும் காசி மீது பாலியல் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காசி மீது அதிகமான புகார்கள் குவிந்ததை அடுத்து அவர் மீது போஸ்கோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாடகி சின்மயி தனது சமூக வலைப்பக்கத்தில் இதுகுறித்து கூறிய போது ’சைபர் குற்றங்கள் மட்டுமே கவனிக்க முடியும் என்றால் ஒரு சில ஆண்கள் எங்களுக்கு எதிராக ஆபாசமாக பேசியும் ஆபாச புகைப்படங்களை அனுப்பியது குறித்தும் நாங்கள் கொடுத்த புகார் என்ன ஆயிற்று? என்று கேட்டுள்ளார். சின்மயி இந்த கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள்: ரஜினிகாந்த் டுவீட்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கும் நிலையில் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே பொதுமக்கள் வேலையின்றி, வருமானம் இன்றி

ரஜினி கிண்டல் செய்ததை 36 வருடங்களுக்கு பின் தெரிவித்த பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை பற்றி தன்னுடைய அம்மாவிடம் கிண்டல் செய்ததை 36 வருடங்கள் கழித்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நடிகை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோயம்பேடு தொடர்பால் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா: எங்கே தெரியுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும்,

கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் புதிய குழப்பம்!!! இது தடுப்பூசி ஆய்வில் தாமதத்தை ஏற்படுத்துமா???

கொரோனா நாவல் SARS-Covid-2 வைரஸ் பரவும் வேகமும் அதன் தன்மையும் நாளுக்கு நாள் மாறுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

தனிமனித இடைவெளியுடன் 'வாத்தி கம்மிங்' டான்ஸ்: அனிருத் ஆச்சரியம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.