சென்று வா அண்ணா: ஆனந்த கண்ணன் மறைவு குறித்து பாடகியின் உருக்கமான பதிவு!

  • IndiaGlitz, [Tuesday,August 17 2021]

ஆனந்த கண்ணன் நேற்று இரவு திடீரென காலமானது சின்னத்திரை உலகினர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் பாடகியுமான ரம்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஆனந்த கண்ணன் மறைவு குறித்து ’சென்று வா அண்ணா’ என உருக்கமாக ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஆனந்த கண்ணன் என் சகோதரர், தந்தை, நலவிரும்பி மற்றும் நண்பனை விட மேலானவர். அவர்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தார். நான் என் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் பலமுறை அவரிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன். எப்படி வாழ வேண்டும், எப்படி நேசிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தவர். எனது கணவரை திருமணம் செய்ய நான் அவருடைய ஒப்புதலைப் பெற்றேன்.

என்னைப் பற்றி என் அம்மா ஏதாவது புகார் கூறினால் ’ரம்யா என் சகோதரி, அவளைப் பற்றி அப்படி சொல்ல வேண்டாம் என்று அம்மாவிடம் எனக்காக வாதாடியவர். ஆனந்த கண்ணன் மறைவு மிகவும் வேதனையானது. அவர் உயிரோடு இருந்து இந்த பதிவை படிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த அவர் மிகச்சிறமனிதர், மிகவும் நேர்மையானவர். அவர் தன்னைச் சுற்றி இருந்த அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தார். அவர் இன்று இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

உங்களுக்கு சொர்க்கத்தில் கண்டிப்பாக சிறப்பான ஒரு இடம் இருக்கும். நீங்கள் எப்போதும் என்னிடம் சொல்வது போல் உன்னை உங்களை நான் மிகவும் அதிகமாக நேசிக்கிறேன் அண்ணா, சென்று வாருங்கள் அண்ணா’ என்று பாடகி ரம்யா மிகவும் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

More News

நானும் இந்திய பிளேயர் தான்: மைதானத்திற்குள் புகுந்த பார்வையாளரால் பரபரப்பு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு மைதானத்துக்கு வந்த ஒரு பார்வையாளர்

சன் டிவி பிரபலம் ஆனந்தக்கண்ணன் திடீர் மறைவு: ரசிகர்கள் அதிர்ச்சி!

சன் டிவியில் பிரபல தொகுப்பாளராகவும் தொலைக்காட்சி தொடர் நடிகராகவும் இருந்த ஆனந்த கண்ணன் திடீரென மறைந்தது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது 

தடுப்பூசி போட்டும் கொரோனா பாதிப்பு: பிக்பாஸ் தமிழ் நடிகையின் வீடியோ!

தான் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் இருப்பினும் தனக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதாகவும் பிக் பாஸ் தமிழ் நடிகை ஒருவர்

அச்சுறுத்தலுக்கு இடையே இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த தாலிபான்கள்… என்ன காரணம்?

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

இந்தியாவில் 50% குழந்தைகளுக்கு கொரோனா? பீதியை கிளப்பும் எய்ம்ஸ் இயக்குநர்!

இந்தியாவில் 3 ஆம் அலை கொரோனா தாக்கம் ஏற்படுவதற்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலோரி,