close
Choose your channels

திடீரென காது கேட்கவில்லை.. பிரபல பாடகியின் அதிர்ச்சி இன்ஸ்டா பதிவு..!

Tuesday, June 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாடகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென தனக்கு காது கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் திரை உலகில் கடந்த 80கள், 90களில் பிரபல பாடகியாக இருந்தவர் அல்கா யாக்னிக் என்பதும் இவர் தமிழிலும் சில பாடல்கள் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’தேசம்’ திரைப்படத்தில் ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்த ’காவிரியா காவிரியா’, ’ஓரம்போ’ என்ற திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த ’இது என்ன மாயம்’, ‘வாய்மை’ திரைப்படத்தில் ’கண்படும் உன் முகம் என்ற பாடல் உள்பட சில பாடல்களை பாடியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாடகி விமானத்தில் இருந்து இறங்கிய போது திடீரென தனக்கு காது கேட்கவில்லை என்றும் சில நாட்களாக இதை யாரிடமும் சொல்லாமல் இருந்த நிலையில் தற்போது தான் தைரியமாக வெளியே சொல்கிறேன் என்றும் பாடகி அல்கா யாக்னிக் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய காதுகளை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் வைரஸ் தாக்குதல் காரணமாகவும், நரம்பு பாதிப்பு காரணமாகவும் தன்னுடைய காது பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள் என்றும் அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்காக ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்ட அவர் ஹெட்போன்களில் அதிக சத்தத்துடன் இசையை கேட்க வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக காதுகளை பராமரித்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் நீங்கள் சீக்கிரமே குணமாகி மீண்டும் காது கேட்கும் திறனை பெறுவீர்கள் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.