மியூட்டில் வைத்து பாடம் நடத்திய அப்பாவி ஆசிரியர்! அவர் கொடுத்த வைரல் ரியாக்ஷன்ஸ்!

  • IndiaGlitz, [Wednesday,February 10 2021]

கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரிகளின் இயல்பு நிலையே முற்றிலும் மாறிவிட்டது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போது ஆன்லைனில்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படி நடக்கும் பல வகுப்புகளில் மாணவர்கள் தூங்கி வழிவது, தொழில்நுட்பக் கோளாறு என சுவாரசியச் சம்பவங்களுக்கும் பஞ்சம் இருப்பது இல்லை.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக் கழகத்தில் (NUS) கணிதப் பேராசிரியராக இருந்துவரும் டோங் வாங் எனும் பேராசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு ஆன்லைனில் 2 மணி நேரமா பாடம் நடத்தி இருக்கிறார். அவர் நடத்திய பாடத்தில் எந்த குறையும் இல்லை. ஆனால் அவர் நடத்திய பாடத்தைத்தான் மாணவர்கள் கேட்க முடியாதவாறு மியூட் செய்து வைத்து விட்டார். வகுப்பு முடிந்ததும் கடைசியில் தன்னுடைய மாணவர்களிடம் எதாவது சந்தேகம் இருக்கிறதா என்று கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த மாணவர்கள் வகுப்பு தொடங்கிய போது உங்கள் குரலை கேட்க முடிந்தது. ஆனால் 6.10 மணிக்கு எல்லாம் உங்களுடைய குரலை கேட்க முடியவில்லை. செல்போனில் உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அதுவும் முடியவில்லை எனக் கூறி இருக்கின்றனர். இதைக் கேட்ட ஆசிரியர் டோங் வாங் அப்பாவியாக தனது மாணவர்களிடம் ரியாக்ஷன் காட்டி இருக்கிறார். இந்த ரியாக்ஷன் புகைப்படம் தற்போது சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் வேர்த்து விறுவிறுக்க பாடம் நடத்திய டோங் வாங்கின் அனைத்து உழைப்புகளும் வீணாகி தற்போது அந்த வகுப்பு இனனொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

More News

பாஜகவில் இணைகிறாரா சிவாஜி கணேசன் குடும்பத்து பிரபலம்?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் பாஜகவில் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ: ஷிவானியின் வைரல் வீடியோ!

பிக்பாஸ் போலவே மறுபடியும் ஒரு த்ரில்லிங் ஷோ பார்வையாளர்களுக்கு காத்திருக்கிறது என பிக்பாஸ் ஷிவானி கூறியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது 

அரசு பேருந்தில்தான் கல்லூரி காலத்தை கழித்தேன்… முன்னணி நடிகர் பதிவிட்ட வைரல் புகைப்படம்!

நடிகர் கார்த்திக் தன்னுடைய கல்லூரி காலத்து புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்த படம் என்னை நிச்சயம் ஸ்டார் ஆக்கும்: எஸ்.ஜே.சூர்யா பேட்டி

எஸ்ஜே சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற திரைப்படம் நீண்ட தாமதத்திற்குப் பின்னர் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

கவினுடன் உள்ள உறவு குறித்து நெத்தியடி பதில் தந்த லாஸ்லியா!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவராகிய லாஸ்லியா அந்த நிகழ்ச்சியின்போது கவினை காதலிப்பதாக கூறிய நிலையில் தற்போது கவினுடன் உள்ள உறவு குறித்து நெத்தியடியான பதிலை தெரிவித்துள்ளது