சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.. மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம்..!

  • IndiaGlitz, [Wednesday,April 26 2023]

கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து ஒரு கிலோ கஞ்சா கடத்தியதாக தமிழரான தங்கராஜ் சுப்பையா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்படவில்லை என்றாலும் கஞ்சாவை அனுப்பும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார் என்பதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அவருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்த வந்த நிலையில் அனைத்து மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தங்கராஜ் சுப்பையாவின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கராஜ் சுப்பையாவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஐநா மனித உரிமை அமைப்பு உட்பட மனித உரிமை ஆர்வலர்கள் தூக்கு தண்டனை நிறைவேற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் தங்கராஜ் சுப்பையாவுக்கு சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

'அழகி' நடிகை நந்திதா தாஸை ஞாபகம் இருக்கிறதா? லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்..!

இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடிப்பில் உருவான 'அழகி' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நந்திதா தாஸ் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

33வது பிறந்த நாளை கொண்டாடிய 'கில்லி' தங்கை நடிகை.. திருமணம் செய்யாததற்கு கூறிய காரணம்..!

தளபதி விஜய் நடித்த 'கில்லி' திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர் தனது 33 வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் அது குறித்த வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.

'கபாலி' படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டம்.. முக்கிய காட்சிகள் மாற்றப்படுகிறதா? 

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான 'கபாலி' திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்றது.

பள்ளி மாணவராக கலக்கும் அசோக் செல்வன்.. 'சபா நாயகன்' டீசர்..!

 நடிகர் அசோக் செல்வன் பள்ளி மாணவராக நடித்திருக்கும் 'சபா நாயகன்' என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில் இந்த டீசர் வீடியோ வைரல் ஆகி வருகிறது 

சினிமாவை விட்டு போனதற்கான உண்மையான காரணம் .... அபிராமி

சினிமாவில் புகழ் பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர் அபிராமி. புகழின் உச்சியில் இருக்கும் போதே அவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.