நுகர்ந்தாலே போதும்… மதுப்பிரியர்களை குஷிபடுத்தும் புது வரவு!

  • IndiaGlitz, [Tuesday,September 07 2021]

மது வகைகளில் எவ்வளவோ புதுப்புது வரவுகள் வந்துவிட்டன. ஆனாலும் நீராவியை உறிஞ்சுவது போன்று மதுப்புகையை உறிஞ்சியே போதையேற்றிக் கொள்ளும் புது வரவை இதுவரை யாரும் கேள்விபட்டே இருக்கமாட்டோம். அப்படியொரு வித்தியாசமான மதுவை சிங்கப்பூரில் இருக்கும் ஒரு சர்வதேச விமான நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இதில் இருக்கும் இன்னொரு அதிர்ச்சியான விஷயம். ஒருமுறை நீங்கள் போதையேற்றிக் கொள்ள வேண்டும் என்றால் இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் செலவாகும் என்பதுதான் பதற வைக்கிறது. சிங்கப்பூரில் உள்ள ஷாங்கே சர்வதேச விமான நிலையத்தில்தான் இந்த மது விற்பனை செய்யப்படுகிறதாம்.

இந்திய மதிப்பில் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் இந்த மதுவை பணம் செலுத்தியவர் மட்டும் ஒருகுறிப்பிட்ட அளவு நுகர்ந்து கொள்ளலாம். ஆனால் 50 வயதிற்கு கீழ் இருக்கும் யாருக்கும் இந்த மது விற்பனை செய்யப் படுவதில்லையாம். கொரோனா நேரத்தில் நீராவி பிடிப்பதிலேயே நம்மூர் மக்கள் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் அரசாங்கமும் சுகாதாரத்துறையும் நீராவி பிடிப்பதினால் கொரோனா வருவதை தடுக்க முடியாது என்று தெரிவித்த பிறகும் பல லட்சக் கணக்கான மக்கள் இன்றும் நீராவி பிடித்து வருகின்றனர்.

ஆனால் கொரோனா நீராவி என்பதையெல்லாம் கண்டுகொள்ளாத சிங்கப்பூர் நிறுவனம் வித்தியாசமான முறையில் மதுவகையை தயாரித்து தனது கல்லாவை நிரப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதோடு கொரோனா நேரத்தில் சர்வதேச விமான நிறுவனங்கள் பல முடங்கியே போய்விட்டன. இப்படி இருக்கும்போது ஷாங்கே விமான நிலையதில் கொரோனா நேரத்தில் நீராவி மது விற்பனை செய்யப்பட்டதா? என்பது குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை.

More News

நீர்ச்சருக்கு விளையாட்டில் தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் நடிகைகள் சிலர் நடிப்பு மட்டுமின்றி பிற கலைகளையும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர் என்பது குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்தோம். குறிப்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் ரேஸ் கார்

ஆக்சன் கிங் அர்ஜூன் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகையா?

கடந்த 1980ஆம் ஆண்டு முதல் சுமார் 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக நடித்து வரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் தற்போது லாஸ்லியா நடித்துவரும் 'பிரண்ட்ஷிப்' மற்றும் 'மேதாவி'

காதலியை கரம்பிடிக்கும் விஜய், அஜித், சூர்யா பட நடிகர்!

விஜய், அஜித், சூர்யாவுடன் நடித்த நடிகர் ஒருவர் தனது காதலியை கரம்பிடிக்க உள்ளார் என்றும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் இணையும் தனுஷ் - அமீர்? எந்த படத்தில் தெரியுமா?

சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அமீர், அதன்பின்னர் 'ராம்' 'பருத்திவீரன்' 'ஆதிபகவன்' போன்ற படங்களை இயக்கினார்

தொடங்கிவிட்டது ஷங்கரின் அடுத்தபடம்: வைரல் புகைப்படங்கள்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் செப்டம்பர்