தயவுசெய்து ஏமாந்துறாதீங்க.. எல்லாம் பொய்.. நடிகர் சிங்கம்புலி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,May 10 2024]

நடிகர் சிங்கம்புலி தனது பெயரில் மோசடி நடப்பதாகவும் அதை உண்மை என நம்பி ஏமாந்து விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக இருப்பவர் சிங்கம் புலி என்பதும் இவர் அஜித் நடித்த ’ரெட்’ சூர்யா நடித்த ’மாயாவி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காமெடி நடிகராக தமிழ் திரை உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் வெளியான ’அரண்மனை 4’படத்தில் கூட ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சிங்கம்புலியின் முகநூல் பக்கம் என்று ஒரு போலியான பக்கம் ஆரம்பிக்கப்பட்டு அதில் அவர் உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு தற்போது சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால் உதவி செய்யவும் என்றும் கோரிக்கை விடுத்து ஒரு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இந்த விளம்பரம் இணையத்தில் வைரலான நிலையில் ஒரு சிலர் பணம் அனுப்பியதாகவும் கூறப்படும் நிலையில் சிங்கம் புலி இது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’தனது பெயரில் போலியான முகநூல் பக்கம் ஆரம்பித்து ஒரு சிலர் தனக்கு உடல்நலம் இல்லை என பணம் வசூல் செய்வது குறித்து கேள்விப்பட்டேன். எனக்கு உடல்நலம் இல்லை என்பது முழுக்க முழுக்க பொய், நான் நன்றாக தான் இருக்கிறேன், நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, எனவே இது போன்ற போலியான விளம்பரங்களை நம்பி யாரும் பணம் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம்’ என்றும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

More News

வருங்கால கணவர் தோளில் சாய்ந்து பறக்கும் வரலட்சுமி.. திருமணத்திற்கு முன் ஒரு ஜாலி அவுட்டிங்.!

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அவர் ஏற்கனவே தனது வருங்கால கணவருடன் ஜாலி ட்ரிப் செய்த புகைப்படங்களை

விஜயகாந்த் இதைத்தான் சொன்னார்.. வாழ்க்கையின் தத்துவத்தை ஒரே நிமிடத்தில் கூறிய செல்வராகவன்..!

நடிகர் மற்றும் இயக்குனர் செல்வராகவன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்க்கையின் தத்துவத்தை ஒரே ஒரு நிமிட வீடியோவில் கூறியதை அடுத்து அந்த வீடியோ தற்போது

'தக்லைஃப்' படத்தில் சிம்பு நடிக்க கூடாது.. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்த பிரபலம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தில் சிம்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு,

'வானத்தை போல' சீரியல் நடிகைக்கு திருமணம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள்..!

சன் டிவியில் ஒளிபரப்பான 'வானத்தைப்போல' என்ற சீரியல் நடிகைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது திருமணம் நடந்துள்ளது.

என் கையில் தாமரை வைத்திருப்பதற்கு இதுதான் காரணம்.. நடிகை நமீதா பேட்டி..!

நடிகை நமீதா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் கையில் தாமரை வைத்துக் கொண்டு பேட்டி அளித்த நிலையில் கையில் ஏன் தாமரை பூவை வைத்திருந்தேன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.