சிம்ரன், திரிஷா ஆகியோர் தான் என் ரோல் மாடல். விஜய் ஆண்டனி நாயகி

  • IndiaGlitz, [Monday,April 02 2018]

விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காளி'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை அம்ரிதா. இவர் ஏற்கனவே 'படைவீரன்' படத்தின் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'காளி' படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் கிருத்திகாவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து அம்ரிதா கூறியதாவது:

 நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது

விஜய் ஆண்டனி சாரின் இசையையும், அவரது நடிப்பையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். மிகப்பெரிய உயரங்களை தொட்ட பிறகும் மிகவும் அடக்கமாக, எளிமையாக இருக்கும் அவரது பண்பை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். படப்பிடிப்பில் ஒரு தோழராக மிகவும் நன்றாக பழகினார், நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என் நடிப்பை பாராட்ட அவர் தவறியதே இல்லை. அது எனக்கு ஊக்கமளிக்கும் ஒரு சக்தியாக அமைந்து என்னை இன்னும் மெறுகேற்றிக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக நான் மிகவும் பதட்டப்படும் நெருக்கமான காதல் காட்சிகளில் உதவுவார்

படைவீரன் படத்தின் பாடல் வீடியோ ஒன்றை பார்த்து தான் கிருத்திகா மேடம் என்னை காளி படத்துக்காக தேர்ந்தெடுத்தார். மிகவும் இனிமையாவர், குறிப்பாக ஒரு பெண் இயக்குனர் படத்தில் வேலை பார்த்தது எனக்கு வசதியாக இருந்தது. நான் அசௌகரியமாக உணரும் காட்சிகளில் எனக்கு உதவியாக இருந்தார். அவருடைய தொடர்ச்சியான ஊக்கம் இன்னும் நன்றாக நடிக்க என்னை செலுத்தியது

சிம்ரன், திரிஷா ஆகியோர் தான் என் ரோல் மாடல். அவர்களின் படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன், அவர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷன். சிம்ரன் ஒரு சிறந்த நடிகை, தான் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னை நிரூபித்தவர். அசத்தும் நடனம், எமோஷனல் நடிப்பு, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதாகட்டும் அனைத்திலும் சிறந்தவர். அதே மாதிரி தான் நடிகை திரிஷாவும், பல ஆண்டுகளாக நடிகையாக பயணித்து வந்தாலும் தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பது அவரின் பெரும் சாதனை

இவ்வாறு அம்ரிதா கூறியுள்ளார்

More News

பயமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை: ரஜினியை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்புராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' மற்றும் '2.0' ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்

6 வருட சம்பளத்தை சச்சின் என்ன செய்தார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது.

சிஎஸ்கே அணிக்கு விக்னேஷ் சிவன் செய்த உதவி

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மீண்டும் களமிறங்கவுள்ள நிலையில்

கமல், ரஜினி உள்பட திரையுலகினர்களுக்கு ஸ்டெர்லைட் அளித்த விளக்கங்கள்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் இரவும் பகலும் தீவிரமாக போராடி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகில் இருந்தும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன.

ரஜினி, கமல் படங்களை திரையிட விடமாட்டோம்: சொன்னது யார் தெரியுமா?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரின் படங்களையும் கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட சலவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.