25 ஆண்டுகள் சிம்ரனுக்கு நெருக்கமானவர் மறைவு.. அதிர்ச்சியுடன் செய்த இரங்கல் பதிவு..!

  • IndiaGlitz, [Friday,December 08 2023]

நடிகை சிம்ரனுக்கு 25 ஆண்டுகளாக நெருக்கமாக இருந்த நண்பர் காலமானதை அடுத்து அதிர்ச்சியுடன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் பதிவு செய்துள்ளார்

நடிகை சிம்ரனின் திரையுலக வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருந்தவர் எம் காமராஜன். இவர் எதிர்பாராத விதமாக காலமாகிவிட்டார். அவரது மறைவு சிம்ரனை அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது நண்பர் காமராஜன் அவர்களின் மறைவு நம்பமுடியாத மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தியாக உள்ளது. 25 ஆண்டுகளாக நண்பர் காமராஜன் எனது வலது கரமாக இருந்தவர், எனது சினிமா வாழ்க்கைக்கு தூணாக இருந்தவர் அவர்தான்

எப்போதும் சிரித்துக் கொண்டு நம்பகத்தன்மையுடன் இருக்கும் அவர் சுயமாக உருவாக்கப்பட்ட ஒரு மனிதர். அவர் இல்லாமல் எனது சினிமா வாழ்க்கை நிச்சயம் சாத்தியம் இல்லாமல் இருந்திருக்கும். அவரது வாழ்க்கை பலரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர் எங்களை விட்டு வெகு சீக்கிரம் சென்று விட்டார். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், அவரது ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும், ஓம் சாந்தி’ என்று நடிகை சிம்ரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

More News

அனுராக் காஷ்யப் இயக்கும் தமிழ்ப்படம்.. ஹீரோ இந்த பிரபல நடிகரா?

பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் முதல் முதலாக ஒரு தமிழ் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி

படப்பெயர் அணிந்த டீசர்ட் உடன் வெள்ள நிவாரண உதவி செய்த பிக்பாஸ் நடிகர்.. செம்ம புரமோஷன்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தனது படத்தின் பெயர் கொண்ட டி-ஷர்ட் அணிந்து வெள்ள நிவாரண உதவி செய்த நிலையில் அவரது படம் நல்ல புரமோஷன் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன.

அரசாங்கம் என்ன செய்கிறது? சென்னை வெள்ளம் குறித்து கேள்வி எழுப்பிய நடிகைகள்..!

சென்னையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகள் உள்பட பல பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.

லிவ்-இன் உறவில் இருந்த இளம் நடிகை தற்கொலை..  தலைமறைவாக இருந்த 'புஷ்பா' நடிகர் கைது..!

இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அதற்கு காரணமானவர் என சந்தேகப்படும் 'புஷ்பா' படத்தில் நடித்த நடிகர் ஒருவாரமாக தலைமறைவாக இருந்ததாகவும்,

டைட்டில் எடுத்துக்கோ, 50 லட்சம் எடுத்துக்கோ, என்ன வேணா பண்ணிக்கோ.. பூர்ணிமா சொன்னது யாரை?

'டைட்டில் எடுத்துக்கோ, 50 லட்சம் எடுத்துக்கோ என்ன வேணா பண்ணிக்கோ' என பூர்ணிமா, அர்ச்சனா குறித்து கூறிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது