close
Choose your channels

முதல்வருக்கு நன்றி கூறி 'மாங்கல்யம் தந்துனானே' பாடிய சிம்பு!

Monday, January 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஏற்கனவே தளபதி விஜய் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த நிலையில் இன்று காலை நடிகர் சிம்புவும் அறிக்கை ஒன்றின் மூலம் தமிழக முதல்வருக்கு இதே கோரிக்கையை வைத்திருந்தார்.

அதனை அடுத்து ஒரு சில மணி நேரங்களில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்த நிலையில் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ’எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த, தமிழக திரை உலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவர் அடுத்த சில நிமிடங்களில் ’ஈஸ்வரன்’ படத்தில் இடம் பெற்ற ’மாங்கல்யம் தந்துனானே’ என்ற வீடியோ பாடலையும் வெளியிட்டுள்ளார். சிம்பு மற்றும் நிதி அகர்வால் அட்டகாசமாக நடனமாடி உள்ள இந்த பாடலை சிம்புவே பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment