close
Choose your channels

கர்நாடக மக்களுக்கு நன்றி கூறிய சிம்பு

Thursday, April 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காவிரி பிரச்சனை குறித்து அரசியல்வாதிகளும் திரையுலக பிரமுகர்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக போராடி வரும் நிலையில் இந்த பிரச்சனையை கோர்ட்டாலும், அரசியல்வாதிகளாலும் தீர்க்க முடியாது, இரு மாநில மக்களிடையே உண்டாகும் அன்பால் மட்டுமே தீர்க்க முடியும் என்று வித்தியாசமான கருத்தை கூறியவர் நடிகர் சிம்பு ஒருவரே

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த சிம்பு, ஏப்ரல் 11ஆம் தேதி கர்நாடகத்தில் வாழும் கன்னட மக்கள் அங்கு வாழும் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து இருமாநில மக்களுக்கும் இடையே எந்தவித வெறுப்பும் இல்லை என்று நிரூபியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். கடந்த பல வருடங்களாக அரசியல்வாதிகளால் உருவாக்க முடியாத தமிழக, கர்நாடக மக்களின் ஒற்றுமையை சிம்புவின் இந்த ஒரே ஒரு பேட்டி உருவாக்கியது. ஆம், நேற்று கர்நாடகத்தின் பல இடங்களில் தமிழர்களை தேடித்தேடி தண்ணீர் கொடுத்த காட்சி அரங்கேறியது. சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த வீடியோக்கள் வெளியானது. ஆக காவிரி பிரச்சனை இரு மாநில மக்களுக்கு இடையே இல்லை என்பதும் இருமாநில அரசியல்வாதிகளால் ஏற்பட்டது என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் தன்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கர்நாடக மக்களுக்கு சிம்பு தற்போது நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியிருப்பதாவது: என்னுடைய கருத்துக்கு மதிப்பளித்து கன்னட மக்கள் பலரும் தமிழா்களுக்கு தண்ணீா் கொடுப்பது போன்ற வீடியோ பதிவை வெளியிட்டுள்ளீா்கள். இதன் மூலம் கன்னட மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை. இடையில் உள்ள தீய சக்திகள் தான் நம்மை இணைய விடாமல் சதி செய்து வருகின்றன என்று உணா்த்தியுள்ளீா்கள். அவா்கள் முகங்களில் நீங்கள் கரியை பூசியுள்ளீா்கள். தமிழக மக்களிடம் கன்னட மக்களை வில்லன்போல் சித்தரித்த அரசியல்வாதிகளின் சுயரூபத்தை புரிந்து கொள்ள செய்த கன்னட மக்களுக்கு நன்றி. 

மேலும் கர்நாடகத்தில் ஒரு தமிழனை அடித்தால் அதை போட்டுக்காட்டி தமிழர்களிடையே வெறியை கிளப்பும் மீடியாக்கள் நேற்று தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்ததை எந்த பெரிய மீடியாக்களும் ஒளிபரப்பவில்லை. இதில் இருந்தே இந்த அரசியல்வாதிகள், மீடியாக்கள் நோக்கம் தண்ணீர் பெறுவது அல்ல என்றும், இரு மாநிலங்களுக்கும் இடையே சண்டை நடக்க வேண்டும் என்பதே நோக்கம் என்பதும் புரிந்துவிட்டது. இவ்வாறு சிம்பு தனது ஆடியோவில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment