எல்லாத்துக்கும் காரணம் இதுதான்: 'ஈஸ்வரன்' ஆடியோ விழாவில் சிம்புவின் எதார்த்தமான பேச்சு!

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற போது இந்த விழாவில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரசிகர்கள் மத்தியில் சிம்பு மிகவும் எதார்த்தமாகவும் அழகாகவும், அர்த்தமுள்ள வகையிலும் பேசியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவர் இந்த விழாவில் பேசியதாவது:

கொரோனா ஊரடங்கு நேரத்தில் அனைவருக்கும் ஒரு நெகட்டிவ் தன்மை இருந்த நிலையில் ’மாநாடு’ படப்பிடிப்பு தொடங்குவதற்குள் ஒரு குறுகிய காலத்தில் ஒரு படத்தில் நடிக்கலாம் என்பதற்காக சுசீந்திரன் அவர்களிடம் இந்த கதையை கேட்டேன். நெகட்டிவ் தன்மையுடன் இருந்த எனக்கு இந்த கதையை கேட்டவுடன் பாசிட்டிவ் எண்ணம் வந்துவிட்டது. நாம் எல்லோரும் மீண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கை இந்த கதையை கேட்டவுடன் எனக்கு வந்தது. கதையை கேட்ட எனக்கே பாசிட்டிவ் எண்ணம் வருகிறது என்றால் இதை படமாக பார்ப்பவர்களுக்கு எந்த அளவுக்கு பாசிட்டிவ் எண்ணம் வரும் என்பதை நினைத்து தான் இந்த படத்தில் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இப்பொழுது எங்கு பார்த்தாலும் நெகட்டிவ் எண்ணமாகவே உள்ளது. யாரைப் பார்த்தாலும் போட்டி பொறாமை என்பதுதான் அதிகம் உள்ளது. அதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும். ஒருவர் தனது உள்ளத்தை சுத்தம் செய்து கொண்டால் போதும், தானாகவே வெளியில் சுத்தமாகிவிடும். நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு ஏற்பட்ட தடைகள் எல்லாமே எனக்கு உள்ளே இருந்த பிரச்சனை தான் காரணம். அதனை நான் சரிசெய்தவுடன் தற்போது எனக்கு எல்லாமே சரியாகி விட்டது. எனவே உங்கள் உள்ளத்தை மட்டும் சுந்த்தமாக வைத்து இருந்தீர்கள் என்றால் வெளியில் உங்களுக்கு நடக்கும் எல்லாமே பாசிட்டிவ் ஆக இருக்கும்’ என்று சிம்பு கூறினார்.

மேலும் எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், எல்லோருடனும் சந்தோஷமாக இருங்கள், யார் எந்த அட்வைஸ் சொன்னாலும் கேட்காதீர்கள், உங்கள் மனதிற்கு எது சரியாக தோன்றுகிறதோ அதை செய்யுங்கள், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் உள்ள நெகட்டிவ்களை சுத்தமாக பார்க்காதீர்கள் என்று சிம்பு இந்த விழாவில் பேசினார்.

More News

தளபதியின் 'மாஸ்டர்' ரிலீஸ்: திரையரங்கு உரிமையாளர்களின் பார்வை!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஜனவரி 13ம் தேதியும் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதியும் வெளியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள்

மீண்டும் ஒருமுறை மன்னிப்பு: 'உண்மையா இது' என நெட்டிசன்கள் கேள்வி!

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி, முதல் நாள் முதல் சக போட்டியாளர்களிடம் ஆவேசமாக பேசுவது, அதன்பின் கமல்ஹாசன் எபிசோடின்போது மன்னிப்பு கேட்பது என்பது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

24 கேரட்டில் பர்கரா? கிறங்க வைக்கும் அதன் விலை!!!

வித்தியாசமான முயற்சியில்தான் இந்த உலகமே வளர்ச்சி பெறுகிறது. அப்படி ஒரு புதிய முயற்சியை பர்கரில் காட்டினால் எப்படி இருக்கும்

இந்தியாவில் பரவும் புதிய தொற்றுநோய்… மனிதர்களுக்கும் பாதிப்பா??

கொரோனா பரவலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இந்தியாவில் புதிய தொற்று நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தட்டி கேட்க போகிறாராம் கமல்: பொறுத்திருந்து பார்ப்போம்!

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியின் ஆத்திரம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துக் கொண்டே செல்வதும், ஆரி  மற்றும் பாலாஜி இடையே தொடர்ச்சியாக மோதல் வந்து கொண்டிருக்கும் காட்சிகளையும் கடந்த இரண்டு நாட்களாக