ஒரே படத்தில் உச்சத்தை தொட சிம்புவுக்கு அரிய வாய்ப்பு

  • IndiaGlitz, [Monday,July 17 2017]

சிம்பு நடித்த 'AAA' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து அவர் சேர்த்து வைத்திருந்த இத்தனை ஆண்டுகால நல்ல பெயரை ஒரே படம் தகர்த்தெறிந்துவிட்டது. இவ்வளவு மோசமான ஒரு படத்தில் சிம்பு நடிக்க எப்படி ஓப்புக்கொண்டார் என்று பலர் கேள்வி கேட்டனர்.
இந்த நிலையில் சிம்புவின் இமேஜ் ஒரே படத்தில் உச்சத்தை தொட ஒரு அரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித் நடித்த 'பில்லா' படத்தின் 3ஆம் பாகத்தில் விரைவில் சிம்பு நடிக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக ஒரு செய்தி பரவி வருகிறது.
ஏற்கனவே 'பில்லா 3' குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் சிம்பு டுவிட்டரில் உரையாடியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தை வெங்கட்பிரபு அல்லது விஷ்ணுவர்தன் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் சிம்பு தான் இழந்த இடத்தை பிடித்துவிடுவார் என்றே கூறப்படுகிறது.

More News

பிக்பாஸ் ஆர்த்தியின் முதல் டுவீட்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்.

சசிகலாவின் சலுகைகளை கண்டுபிடித்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா திடீர் டிரான்ஸ்ஃபர்

சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்காக சிறைத்துறை மேலதிகாரிகள் ரூ.2 கோடி வரை லஞ்சம் பெற்றிருப்பதாகவும் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சுமத்தியிருந்தார்...

அஜித்துக்கு இருந்த தைரியம் கமலுக்கு ஏன் இல்லை? அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அதிமுக அரசு மீது கடுமையான விமர்சனம் செய்து வருவதும், அதற்கு தமிழக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையும் இருந்து வருகிறது.

தைரியம் இருந்தால் கமல் அரசியலுக்கு வரட்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருவதாகவும், ஊழல் விஷயத்தில் பீகாரை தமிழகம் மிஞ்சிவிட்டதாகவும் கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு கொடுத்த சிம்பு

சமீபத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இங்கிலாந்தில் 'நேற்று இன்று நாளை' என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியபோது தமிழில் மட்டுமே அதிக பாடல்கள் பாடியதாக கூறி வட இந்தியர்கள் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும்போதே வெளியேறியதாக சர்ச்சை எழுந்தது.