'எஸ்டிஆர் 48' படம் என்ன ஆச்சு? வெற்றி பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு..!

  • IndiaGlitz, [Friday,September 27 2024]

சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகயிருந்த ‘எஸ்டிஆர் 48’ படம் இன்னும் தொடங்காத நிலையில், சிம்பு வேறு ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்திலிருந்து விலகியதை தொடர்ந்து, புதிய தயாரிப்பாளர் இன்னும் கிடைக்கவில்லை என்பதால், படப்பிடிப்பு தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், சிம்பு தற்போது கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை முடித்த பின்பு, அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியானது.

’ஓ மை கடவுளே’ என்ற படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ’டிராகன்’ படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படத்தை முடித்த பின், அஸ்வத் மாரிமுத்து, சிம்புவின் புதிய படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ‘டிராகன்’ படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

More News

மீண்டும் இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத்? ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் விஜய் இயக்கத்தில், ஏற்கனவே "தலைவி" என்ற திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க

கார் ரேஸ்-க்கு தயாராகும் அஜித்.. சூப்பர் வீடியோ வைரல்..!

நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

பிரபல நடிகரின் படத்தில் வில்லன்களாக நடிக்கும்  நட்சத்திர ஜோடி.. யார் அவர்கள்?

பிரபல நடிகரின் படத்தில் பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி வில்லன்களாக நடிக்க இருப்பதாக கூறப்படும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகள்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. நடிகை பூஜா குமார் க்யூட் பதிவு..!

நடிகை பூஜா குமார் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "மகள்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்

எங்கள் மொத்த குடும்பமும் இதுவரை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை: விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எங்கள் மொத்த குடும்பமும் இதுவரை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததே இல்லை" என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பதிவு தற்போது