'சூர்யா 44' படத்தில் இணைந்த சிம்பு பட நடிகர்.. அந்தமான் விரைவதாக தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,June 23 2024]

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு தற்போது அந்தமானில்ல் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிம்பு படத்தில் நடித்த மலையாள நடிகர் இணைவதாகவும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அந்தமான் விரைவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் அந்தமானில் ’சூர்யா 44 ’படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அங்கு அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக துறைமுகத்தில் உள்ள கப்பல் ஸ்டண்ட் காட்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ’ரசவாதி’ படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகர் சுஜித் ஷங்கர் என்பவர் இணைந்து உள்ளதாகவும் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அந்தமான் சென்று இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே தமிழில் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ சிம்பு, ஹன்சிகா நடித்த ’மஹா’ மற்றும் ரசவாதி ஆகிய படங்களில் நடித்த நிலையில் தற்போது ’சூர்யா 44 ’படத்திலும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

More News

குக் வித் கோமாளி சீசன் 5: குக்குகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.  இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஸ்ரீகாந்த் தேவா மட்டுமே

திருமணம், குழந்தை பிறப்பிற்கு பின் ரீஎன்ட்ரி ஆகும் சாயிஷா.. யாருடன் முதல் படம்..!

நடிகை சாயிஷா திருமணம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி  ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுவிலக்கு சாத்தியமில்லை.. ஆனால் இதை செய்யலாம்.. அரசுக்கு கமல்ஹாசன் அறிவுரை..!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரடியாக

புயலுக்கு பின் அமைதி.. அமைதிக்கு பின் ஒரு புயல்.. த்ரிஷா வர்ணித்தது யாரை?

நடிகை த்ரிஷா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் 'புயலுக்கு பின் ஓர் அமைதி, அமைதிக்கு பின் ஒரு புயல். என்று வர்ணித்து தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சினிமாவின் எதிர்காலத்தை மறுவரையறை செய்யும் படம்.. சிம்பு பாராட்டிய திரைப்படம்..!

சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் சிம்பு சினிமாவை மறு வரையறை செய்யும் திரைப்படம் என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.