சிம்பு, ஜி.வி.பிரகாஷ் படங்களின் சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,November 21 2016]

கடந்த 11ஆம் தேதி வெளியான சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் மற்றும் கடந்த வாரம் வெளியான ஜி.வி.பிரகாஷின் 'கடவுள் இருக்குறான் குமாரு' படங்களின் சென்னை வசூல் நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
சிம்புவின் அச்சம் என்பது மடமையடா' கடந்த வார இறுதியில் சென்னையில் 22 திரையரங்க வளாகங்களில் 287 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ. 88,68,540 வசூல் ஆகியுள்ளது. மேலும் இந்த படம் வெளியான நவம்பர் 11 முதல் நேற்று வரை சென்னையில் ரூ.4,34,29,220 வசூல் ஆகியுள்ளது. சிம்புவின் படங்களில் சென்னையில் அதிக வசூலான படம் இதுதான் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது.
அதேபோல் ஜி.வி.பிரகாஷின் 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படம் கடந்த வார இறுதியில் சென்னையில் 18 திரையரங்க வளாகங்களில் 223 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.79,41,360 வசூலாகியுள்ளது. திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். மேலும் 'த்ரிஷா இல்லைனா' நயன்தாரா' படத்திற்கு பின்னர் அதிக வசூல் செய்த ஜி.வி.பிரகாஷ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.