சிம்புவின் 'பத்து தல' படத்தின் பக்கா அப்டேட்!

  • IndiaGlitz, [Tuesday,September 07 2021]

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அவர் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் மற்றொரு படமான ’பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளார் என்றும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் இன்னும் 17 நாட்கள் மட்டுமே இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து சிம்பு நடித்த ’மாநாடு’ ’வெந்து தணிந்தது காடு’ ’பத்து தல’ ஆகிய படங்கள் விரைவில் ரிலீசுக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிம்பு நடித்து முடித்துள்ள ’மஹா’ என்ற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் அந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சிம்புவுடன், கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் என்பதும் ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார் என்பதும், ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள ‘கொரோனா குமார்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், அதேபோல் ’மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சிம்புவுக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்து வருவதும் அந்த படங்கள் உடனுக்குடன் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருவதையும் பார்க்கும்போது விரைவில் சிம்பு ஒரு விஜய் சேதுபதி ஆக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.