சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படம் குறித்து சூர்யா என்ன சொன்னார் தெரியுமா?

சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை இந்த படத்திற்கு கொடுத்து வருகின்றனர். இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததுமே பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பதும் இதனால் இந்த படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

19 வயது இளைஞன் தன்னுடைய சொந்த ஊரில் இருந்து பிழைப்புக்காக மும்பை செல்லும் நிலையில் அங்கு கேங்க்ஸ்டர்களிடம் சிக்கிக் கொள்கிறான். அதன்பின் ஒவ்வொரு கட்டமாக கேங்க்ஸ்டரின் தலைவனாக அந்த இளைஞன் மாறுவது எப்படி என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

முத்து என்ற கிராமத்து இளைஞனாகவும் படிப்படியாக கேங்க்ஸ்டராக வளரும் சிம்புவின் நிலையை இயக்குனர் கௌதம் மேனன் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாகவும் ஏஆர் ரகுமானின் தெறிக்க வைக்கும் பின்னணி இசையோடு செல்கிறது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் நல்ல விமர்சனங்களை கேட்டு தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும் இந்த படத்தை காண காத்திருப்பதாகவும் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் கௌதம் மேனன், சிம்பு, ஏஆர் ரகுமான் மற்றும் வேல்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் இந்த வாழ்த்திற்கு பதிலளித்துள்ள சிம்பு, ‘மிகவும் நன்றி அண்ணா உங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ், சூரி, கௌதம் கார்த்திக் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பதும், சிம்பு அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

கவுதம் மேனனின் அடுத்த திரைப்படத்தில் லிங்குசாமி நாயகன்?

 கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்றும் இந்த படம் நிச்சயம் சிம்பு மற்றும்

புத்தர் கோயிலை அடுத்து அஜித் விசிட் செய்த உலகப்புகழ் பெற்ற கோயில்: வைரல் புகைப்படங்கள்

அஜித் தற்போது லடாக் உள்ளிட்ட பகுதிகளில் பைக் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் அப்போது அவர் சில கோயில்கள் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளையும் பார்வையிட்டு வருகிறார் என்பதும் தெரிந்தது.

பாத்-டேப் குளியல், நீர்ச்சருக்கு விளையாட்டு. மாலத்தீவை அணுஅணுவாக ரசிக்கும் பிரணிதா: வீடியோ வைரல்!

சமீபத்தில் குழந்தை பெற்ற நடிகை பிரணிதா தனது கணவருடன் மாலத்தீவு சென்றுள்ள நிலையில் மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

வீட்டில் பணியாற்றும் ஊழியரின் திருமணத்திற்கு விக்ரம் செய்த செலவு இத்தனை லட்சங்களா?

பொதுவாக திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களின் இல்லத் திருமணத்திற்கு வருவது இல்லை. அப்படியே வந்தாலும் பேருக்கு தலைகாட்டி விட்டு சென்று விடுவார்கள்.

'சத்யா' சீரியல் ஆயிஷாவுக்கு திருமணமாகிவிட்டதா? போட்டோஷூட்டால் வந்த குழப்பம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று 'சத்யா' என்பதும் இதில் விஷ்ணு மற்றும் ஆயிஷா ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.