சிம்பு பிறந்த நாளில் ரசிகர்களுக்கு கிடைக்கும் 36 வினாடி விருந்து!

  • IndiaGlitz, [Wednesday,February 02 2022]

நடிகர் சிம்புவின் பிறந்த நாள் நாளை கொண்டாட இருக்கும் நிலையில் நாளை அவர் நடித்து வரும் இரண்டு படங்களின் அப்டேட் வரும் என்றும் சிம்பு ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இன்று சரியாக நள்ளிரவு 11.52 மணிக்கு சிம்பு நடித்து வரும் படங்களில் ஒன்றான ’பத்து தல’ படத்தின் 36 வினாடிகள் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக இருப்பதாகவும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாக இருக்கும் இந்த வீடியோ மிக பெரிய வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஆச்சரியமான அறிவிப்பு ஒன்றும் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் நாளை சிம்பு பிறந்தநாளை கொண்டாடும் அவரது ரசிகர்களுக்கு சரியான விருந்து காத்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ படங்களை அடுத்து சிம்பு, ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும், கோகுல் இயக்கும் இந்த படத்தின் நாயகியாக அதிதிஷங்கர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

சமந்தா டீ-சர்ட்டில் சர்ச்சைக்குரிய வாசகங்கள்: நெட்டிசன்கள் விமர்சனம்!

சமீபத்தில் ரசிகர் ஒருவர் சமந்தாவின் புகைப்படத்தை எடுத்து இணையதளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படத்தில் சமந்தா அணிந்திருந்த டீசர்ட்டில் சர்ச்சைக்குரிய வாசகம் இருந்ததை

நிரூப்-அபிராமி பிரிந்ததற்கான காரணம் என்ன?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கும் நிரூப் மற்றும் அபிராமி ஏற்கனவே காதலர்களாக இருந்த நிலையில் அவர்கள் பிரிந்ததற்கான காரணம் என்ன

10 ரூபாய்க்கு தரமான சாப்பாடு கொடுத்து நெகிழ வைக்கும் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம்வந்த நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும் தற்போது முன்னணி நடிகருமாக

எனது போட்டோவை போட்டோஷாப் செஞ்சுட்டாங்க: அதிர்ச்சியில் மாளவிகா மோகனன்!

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' நாயகி மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான மற்றும் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில்

பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்க்க பணஉதவி செய்யுங்கள்: உரிமையுடன் கேட்கும் கமல்ஹாசன்

பகாசுர ஊழல் பேர்வழிகளை ஒழிக்க பண உதவி செய்யுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பொதுமக்களிடம் உரிமையுடன் கேட்டுள்ளார்