சிம்புவின் 'பத்து தல' சென்சார் தகவல்.. மார்ச் 30ல் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,March 22 2023]

சிம்பு நடித்த ’பத்து தல’ என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்த அறிவிப்பை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சிம்பு நடிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பத்து தல’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்று வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன், அனு சித்தாரா, டிஜே அருணாசலம், ரெடின் கிங்ஸ்லி, மனுஷ்யபுத்திரன், செண்டாயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். பரூக் பாஷா ஒளிப்பதிவில் ப்ரவீன் கே.எல். படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

More News

மகேஷ்பாபுவின் மகளா இவர்? பாவாடை தாவணியில் தேவதை போல் இருக்கும் சூப்பர் வீடியோ..!

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் மகள் பாவாடை தாவணியில் எடுத்த போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

திவாலான அமெரிக்க வங்கியால் கோடிக்கணக்கான பணத்தை இழந்துவிட்டேன்: பிரபல நடிகை..!

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி என்ற வங்கி சமீபத்தில் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த வங்கியால் தான் கோடி கணக்கான பணத்தை இழந்து விட்டேன் என பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளது

உளறிகிட்டே இருக்காம உருப்புட்ற வழிய பாரு.. மணிமேகலையின் காட்டமான பதிவு..!

 நெட்டிசன் ஒருவர் மணிமேகலையின் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த நிலையில் மணிமேகலை அதற்கு பதிலடியாக ஆவேசமாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். 

இந்தியாவில் இந்த பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றது நான் ஒருவரே.. பிரபல இசையமைப்பாளர் பெருமிதம்..!

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிஎச்டி டாக்டர் பட்டம் பெற்று இருப்பதாகவும் இந்த துறையில் டாக்டர் பட்டம் பெற்றது இந்தியாவில் தான் ஒருவரே என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு கார்த்தி பாராட்டு..

தமிழக சட்டமன்றத்தில் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார்.