தடைகளை தகர்த்தது சிம்பு படம்: நீதிமன்ற ஆணையால் விரைவில் ரிலீஸ் தேதி!

  • IndiaGlitz, [Tuesday,June 15 2021]

சிம்பு ஹன்சிகா நடிப்பில் உருவான ’மஹா’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் இயக்குனர் ஜமீல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த படத்தின் எடிட்டிங் பணிகள் தனக்கு தெரியாமலேயே முடிந்துவிட்டதும் என்றும், படப்பிடிப்பு முடியும் முன்னரே படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துவிட்டதாகவும் தனக்கு சம்பள பாக்கி இருப்பதால் அந்த சம்பள பாக்கியும் வரவில்லை என்றும் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி ’மஹா’ படத்தை திரையிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் இயக்குனருக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கொடுத்துவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து ’மஹா’ படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்ற தடையை தகர்த்து உள்ள நிலையில் சிம்பு ஹன்சிகா நடித்த ’மஹா’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸ் ஆகவிருப்பதாகவும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ’மாநாடு’ திரைப்படமும் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கும்பமேளாவில் குளறுபடி… 1 லட்சம் போலி கொரோனா முடிவுகள் வெளியானதாகப் பகீர் தகவல்!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்டபோது உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஆண்டுதோறும் 3 மாதம் கொண்டாடப்படும்

லண்டனில் திடீரென காணாமல் போன 'ஜகமே தந்திரம்' நடிகர்: படப்பிடிப்பின்போது நடந்த பதட்டம்!

தனுஷ் நடித்த ;ஜகமே தந்திரம்; திரைப்படம் வரும் 18ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பூக்காரிக்கு பொருள் கொடுத்தேன்...! மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த கவிஞர்...!

இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் பலரும் தங்கள் உறவுகளை இழந்து வாடி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தினக்கூலிகள் பலரும் பொருளாதார ரீதியாக ஏராளமான துன்பவங்களை அனுபவித்து வருகிறார்கள்

மின்கட்டணம் அளிக்க குறிப்பிட்ட நாட்களுக்கு விலக்கு தேவை....! சீமான் அரசுக்கு கோரிக்கை....!

தமிழகத்தில் மின்கட்டணத்தை செலுத்த பொதுமக்களுக்கு 2 மாதங்களுக்கு விலக்க அளிக்க வேண்டும் என, தமிழக அரசிற்கு சீமான் வலியுறுத்தியுள்ளார்

மொட்டை ராஜேந்திரனுடன் விஜய் மகன், மகள்: வைரலாகும் 'தெறி' படப்பிடிப்பு புகைப்படம்!

தளபதி விஜய்யின் 'தெறி' படப்பிடிப்பு நடைபெற்றபோது அந்த படப்பிடிப்பிற்கு வந்திருந்த விஜய் மகன் சஞ்சய் மற்றும் விஜய் மகள் திவ்யா ஆகியோர்  நடிகர் மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து எடுத்த