சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு எப்போது? தயாரிப்பாளர் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,October 07 2020]

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வந்த ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என சிம்பு ரசிகர்கள் இடையே கேள்வி எழுந்தது.

அது மட்டுமின்றி சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் இருந்ததால் ’மாநாடு’ படப்பிடிப்பும் தள்ளிப்போகுமா? என்ற அச்சமும் ரசிகர்கள் மனதில் இருந்தது. இதனை அடுத்து தற்போது சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் ’மாநாடு’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது என்பதை அறிவித்து உள்ளார்.

தடைகளை உடைத்து, பாதிப்புகள் கடந்து, ’மாநாடு’ நவம்பர் முதல் வாரம் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து ’மாநாடு’ படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இரண்டாவது நாளிலும் 'மேன் ஆஃப் த மேட்ச்: அசத்தும் அறந்தாங்கி நிஷா!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே அசத்திய அறந்தாங்கி நிஷா நேற்று இரண்டாவது நாளிலும் பார்வையாளர்களின் மேன் ஆப் தி மேட்ச் விருதை பெற்றார்

அடுத்த வாரம் நாமிநேஷனில் நான்கு போட்டியாளர்கள்: யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஆரம்பித்து நேற்றைய இரண்டாவது நாளும் முடிவடைந்த நிலையில் ஆரம்பமே அமர்க்களமாக உள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்

விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார்

கொல்கத்தாவுக்கு அக்னிப் பரீட்சை! 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: தொண்டர்கள் அதிர்ச்சி

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு