அந்தப் பாடலை நான் எழுதவில்லை. இசையமைக்கவில்லை. சிம்பு

  • IndiaGlitz, [Sunday,November 12 2017]

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து சிம்பு பாடிய பாடல் சமீபத்தில் இணையதளங்களில் வைரலானது. ’தட்ரோம் தூக்குறோம்’ என்று தொடங்கும் இந்த பாடலில் உள்ள வரிகள் பண மதிப்பிழப்பால் மக்கள் பட்ட கஷ்டங்கள் வெளிப்பட்டதால் பொதுமக்கள் சார்பில் வரவேற்பும், பாஜக சார்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சிம்பு வீட்டின் முன் போராட்டம் நடத்தவுள்ளதாக வெளிவந்த செய்தியினை அடுத்து சிம்புவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் சிம்பு இந்த பாடல் குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:  'எனக்குச் சரியென்று தோன்றினால் எத்தகைய துணிச்சலான கருத்துகளையும் சொல்லத் தயங்கமாட்டேன். அந்தப் பாடலை நான் எழுதவில்லை. இசையமைக்கவில்லை. என் படத்துக்கான பாடலுமில்லை. இந்தப் பாடலை பாடச் சொல்லிகேட்டார்கள். நன்றாக இருந்தது. மக்கள் பட்ட கஷ்டங்களை எடுத்துக் கூறியிருந்ததால் அதனைப் பாடினேன். அதில் தவறு ஒன்றும் இல்லை. பண மதிப்பு நீக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததைத்தான் அதில் சொல்லியிருந்தார்கள். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கோ, அந்தப் பாடலுக்கோ இல்லை'  என்று கூறியிருந்தார்

More News

இன்றிரவு முதல் சென்னையில் மழை வெளுத்து வாங்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் மழை குறித்து பதிவு செய்திருக்கும் முக்கிய தகவல் இதுதான்:

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து தினகரன் முக்கிய அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ உரிய நேரத்தில் தேவைப்பட்டால் வெளியிடப்படும் என சசிகலாவின் உறவினர்கள் கூறி வந்தனர்.

பிக்பாஸ் நடிகருக்கு மலையாள திரையுலகில் கிடைத்த வாய்ப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் சினிமாவிலும் தொலைக்காட்சிகளிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் 'அறம்' பார்த்த நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மலேசியாவில் நட்சத்திர கலைவிழா: கமல், ரஜினி கலந்து கொள்கின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் இணைந்து, வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி நட்சத்திர விழா ஒன்றை மலேசியாவில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.