இனிமேல் மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லிடுவேன்: போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த சிம்பு

இனிமேல் மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லிவிடுவேன் என பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களுக்கு சிம்பு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது வெளியான பிக்பாஸ் அல்டிமேட் புரோமோ வீடியோவில் சிம்பு, ‘எனக்கு என்னவென்று புரியவில்லை, உங்களுக்கு முதலில் அந்த டாஸ்க் புரிந்ததா புரியவில்லையா என்றே தெரியவில்லை. இந்த டாஸ்க்கில் ஒரே ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு எதற்கு ஏன் இவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்? அந்த உரையாடல் இந்த சமயத்தில் தேவையா? நிரூப் சொன்னால் போய்விடுகிறேன் என்று தாமரை செல்கிறார், தாமரை சொன்னால் நான் போகிறேன் என்று நிரூப் சொல்கிறார். எல்லாரும் இறங்கி போய் விட்டீர்கள் என்றால் எதற்காக கேம் விளையாடுகிறீர்கள்?

இன்னும் 2 வாரம் தான் இருக்கிறது. நானும் வேண்டாம் வேண்டாம் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறேன். என்னை எவ்வளவு கேள்வி கேட்கிறார்கள் தெரியுமா? லெப்ட் அண்ட் ரைட் வெளுத்து வாங்குங்குகள் என்று இங்கே கூறுகிறார்கள். இனிமே எல்லாம் அப்படி இருக்க முடியாது, டைரக்டா மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிருவேன்’ என சிம்பு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.