close
Choose your channels

கேக் வெட்டி கொண்டாடிய 'மாநாடு' படக்குழு: காரணம் இதுதான்!

Saturday, July 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் உருவாகி வந்த ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. ஓசூரில் உள்ள விமான நிலையத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்றும், நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து சிம்பு, சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு உள்பட படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து கேக் வெட்டி கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் வரும் ஆயுத பூஜை தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது

சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி, எஸ ஜே சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் யுவன்சங்கர்ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத்தின் ’மங்காத்தா’ படத்தை விட மிக அதிக பட்ஜெட்டில் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார் என்பதும், வெங்கட்பிரபு இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment