மீண்டும் தொடங்குகிறதா 'வேட்டை மன்னன்'? சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்து!

  • IndiaGlitz, [Monday,March 07 2022]

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ’வேட்டை மன்னன்’ என்ற திரைப்படம் உருவாகி வந்த நிலையில் திடீரென அந்த படம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர்தான் நெல்சன், ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதனை அடுத்து ’டாக்டர்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி முடித்துவிட்டு, தற்போது தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.

இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் நெல்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 169’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் சிம்பு நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான 'வேட்டை மன்னன்’ படத்தை நெல்சன் தொடங்க இருப்பதாகவும் இதற்கு சிம்புவும் ஒப்புதல் கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அனேகமாக ரஜினிகாந்த் படத்தை முடித்துவிட்டு நெல்சன் ’வேட்டை மன்னன்’ படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் நெல்சன் ’வேட்டை மன்னன்’ படத்தையும் சிம்பு ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிம்பு ரசிகர்களுக்கு மாநாடுக்கு பிறகு மீண்டும் ஒரு விருந்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.

More News

மீண்டும் தென்னிந்திய திரைப்படத்தில் சன்னிலியோன்: ஹீரோ யார் தெரியுமா?

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சன்னிலியோன் அவ்வபோது தென்னிந்திய திரையுலகில் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த பொண்ணை தூக்கிட்டான்னா செம வொர்த்: 'எதற்கும் துணிந்தவன்' புரமோ வீடியோ

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விறுவிறுப்பாக

மீண்டும் மருத்துவமனையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அனுமதி: என்ன ஆச்சு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதன் பின் வீடு

வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகை!

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'  என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் ஒரு பிரபல நடிகை இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் 'மாநாடு' தயாரிப்பாளர்!

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தை 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.