close
Choose your channels

எத்தனை முறை திருமணம் நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்: தனுஷ், சிம்பு பட நடிகை..!

Wednesday, September 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் எனக்கு பலமுறை திருமணம் நடத்தி வைத்து விட்டன என்றும் எத்தனை முறை எனக்கு திருமணம் நடத்தி வைத்தார்கள் என்பதை நானே மறந்து விட்டேன் என்றும் சிம்பு மற்றும் தனுஷ் படத்தில் நடித்த நடிகை தெரிவித்துள்ளார்.

சிம்பு நடித்த ’குத்து’ தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ சூர்யா நடித்த ’வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா.

இவர் நடிகை மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு மாண்டியா தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தாலும் காங்கிரஸ் கட்சியிலேயே அவர் தொடர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் சினிமாவில் மீண்டும் திவ்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இவருக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருப்பதாக வதந்திகள் பரவி வருகிறது.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா ஸ்பந்தனா கூறிய போது ’ஊடகங்கள் எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துள்ளது, எத்தனை முறை என்பதை நானே மறந்து விட்டேன், நான் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் நானே உங்கள் அனைவரிடமும் தெரிவிக்கிறேன். அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை மற்றும் வதந்திகளை பதிவு செய்வதை நிறுத்துங்கள்’ என்று கூறியுள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment