close
Choose your channels

முன்ஜாமீனுக்கு முயற்சி செய்கிறாரா சிம்பு?

Thursday, December 17, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் இணையதளத்தில் வெளியான பீப் பாடலை பாடியவர் மற்றும் இசையமைத்தவர் என கூறப்படும் சிம்பு மற்றும் அனிருத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் மீது சென்னையிலும் மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


நேற்று முன்தினம் மூன்று வழக்குகளும், நேற்று இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்டமாக இந்த பாடலை இணையதளத்தில் பதிவு செய்தவர் யார்? என்பதை கண்டுபிடித்து அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை தொடங்கவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும் சிம்பு வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சிம்புதான் இந்த பாடலை பாடினாரா என்பதை உறுதிப்படுத்த அவருக்கு வாய்ஸ் டெஸ்ட் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்கு சிம்பு முன்ஜாமீனுக்கு முயற்சி செய்வதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment