பீப் பாடலை இயற்றியது ஏன்? போலீஸாரிடம் சிம்பு விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,February 23 2016]

கடந்த டிசம்பர் மாதம் அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் பெண்களை அவமதிக்கும் வகையில் அமைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருவர் மீதும் கோவை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக ஏற்கனவே அனிருத் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்ட நிலையில் நேற்று சிம்பு கோவை போலீசார் முன் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளித்தார்.


இந்நிலையில் இந்த விசாரணையில் காவல்துறையினர் கேட்ட கேள்விகளுக்கு சிம்பு கூறிய பதில் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. சிம்புவிடம் கோவை போலீசார் சுமார் 20 நிமிடங்கள் விசாரணை செய்ததாகவும், அவர்கள் கேட்ட 35 கேள்விகளுக்கும் சிம்பு பொறுமையாக பதில் கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

காதல் தோல்வி ஏற்பட்டதால்தான் இந்த பாடலை தான் எழுதி இசையமைத்து பாடியதாகவும், இந்த பாடல் முழுக்க முழுக்க தனது சொந்த இசைக்கருவியின் மூலம்தான் கம்போஸ் செய்யப்பட்டதாகவும், இந்த பாடலுக்கும் அனிருத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.

மேலும் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த இந்த பாடல் இணையத்தில் எப்படி லீக் ஆனது என்று தெரியாது என்றும், இந்த விஷயத்தில் தான் ஒரு அப்பாவி என்றும் இணையத்தில் இந்த பாடல் லீக் ஆனதற்கு தான் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

ரஜினியின் உடல்நலம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளையதலைமுறை நடிகர்களுக்கு இணையாக ஒரே நேரத்தில் 'கபாலி' மற்றும் '2.0'...

சீயான் விக்ரமின் 'இருமுகன்' ரிலீஸ் தேதி

எந்த ஒரு கேரக்டர் கொடுத்தாலும், அந்த கேரக்டராகவே மாறிவிடும் நடிகர்களில் ஒருவரான சீயான் விக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'இருமுகன்'...

பிரபுதேவா தந்தை கேரக்டரில் பிரபல மலையாள இயக்குனர்

மலையாள சூப்பர்ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் பல நேரடி தமிழ்ப்படங்களில் நடித்திருக்கும் நிலையில்...

பிப்ரவரி 28 முதல் ஏரியா மாறுகிறார் வெங்கட்பிரபு

வெங்கட்பிரபு இயக்கிய முதல்படமான 'சென்னை 600 028 திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியவதை அடுத்து அதே படத்தில் நடித்த சிவா...

கார்த்தியின் தோழா'வுக்கு கிடைத்த முதல் வெற்றி

மெட்ராஸ், கொம்பன் ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த நடிகர் கார்த்தியின் அடுத்த படமான 'தோழா' படமும் ஹிட்டானால் கோலிவுட்டில் ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்த ஹீரோ பட்டியலில் கார்த்தியும் இணைந்துவிடுவார்...