மணிரத்னம் பட நடிகையுடன் காதல்.. உறுதி செய்த நடிகர் சித்தார்த்!

  • IndiaGlitz, [Sunday,October 30 2022]

பிரபல இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடித்த நடிகையுடன் காதல் என நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான சித்தார்த், ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் அவர் நடித்த அவர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் ஒரு சில நடிகைகளை காதலிப்பதாக ஏற்கனவே வதந்திகள் கிளம்பிய நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’செக்கச் சிவந்த வானம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை அதிதி ராவ் ஹைத்ரி உடன் சித்தார்த் காதல் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இருவரும் இணைந்து பல பொது இடங்களுக்கு சென்று வருவதாகவும் விரைவில் இருவரும் தங்கள் காதலை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து கூறிய சித்தார்த், ‘என் இதய ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று தனது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து இருவரும் காதலிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதிராவ் ஹைத்ரி தற்போது ’மகா சமுத்திரம்’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி கடந்த 2009ஆம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து அதன்பின் 2013ஆம் ஆண்டு பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அசீமை அடுத்து ஆயிஷாவை வச்சு செஞ்ச கமல்ஹாசன்: வைரல் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய கமல்ஹாசன் எபிசோடு காரசாரமாக இருந்தது என்பதும் அவர் அசீமை கடுமையாக கண்டித்து எச்சரிக்கை விடுத்தார் என்பதையும் பார்த்தோம்.

விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள்: சென்னையில் மட்டும் இத்தனை லட்சம் அபராதமா?

விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதத் தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டது என்பதும் உயர்த்தப்பட்ட அபராத தொகை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

40 வயதில் குழந்தை பெற்ற 'கோலங்கள்' சீரியல் நடிகை: குவியும் வாழ்த்துக்கள்!

நடிகை தேவயானி நடித்த 'கோலங்கள்' என்ற சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்த நடிகை ஒருவர் 40 வயதில் குழந்தை பெற்று உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே.. நயன்தாராவை வர்ணித்தவர் யார் தெரியுமா?

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் கூட பளபளக்கும் பந்தூரமே என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை  வர்ணித்த சமூக வலைதள பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்: ரசிகர்கள், திரையுலகினர் அதிர்ச்சி!

தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.