திடீரென எல்லோரும் ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள்: சித்தார்த்

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

உங்கள் ஹீரோவை கவனமாக அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள் என்றும் திடீரென எல்லோரும் ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள் என்றும் சித்தார்த் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில் எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த திரையுலக, கிரிக்கெட் பிரபலங்கள் திடீரென நேற்று முதல் இந்தியாவின் இறையாண்மை குறித்தும், தேசத்தின் ஒற்றுமை குறித்தும், விவசாயிகள் போராட்டம் குறித்தும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவித அழுத்தம் காரணமாகத்தான் இந்த பிரபலங்களின் கருத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவ்வப்போது சமூக கருத்துகளை ஆவேசமாக தெரிவித்து வரும் நடிகர் சித்தார்த் இது குறித்து கூறிய போது ’உங்கள் ஹீரோக்களை நீங்கள் கவனமாகவும் அறிவுபூர்வமாகவும் தேர்வு செய்யுங்கள். கல்வி, அன்பு, நேர்மை மற்றும் கொஞ்சம் முதுகெலும்புடன் நடந்து கொள்ளும் தன்மை கண்டிப்பாக தேவை. எந்த நிலைப்பாட்டிலும் எதிலும் எடுக்காதவர்கள் திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள் என்பதை யோசியுங்கள் இதுதான் இவர்களின் பிரச்சாரம்’ என்று விமர்சனம் செய்துள்ளார்

விவசாயிகள் போராட்டம் குறித்தும் திடீரென அரசுக்கு வக்காலத்து வாங்கி பேசும் திரையுலக, கிரிக்கெட் பிரபலங்கள் குறித்தும் சித்தார்த் கூறியுள்ள இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

ரஜினி, அஜித், விஜய்யை நேரில் சந்திக்க உள்ளோம்: ஆர்.கே.செல்வமணி பேட்டி!

கொரோனா பேரிடர் காலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்த ரஜினி, அஜித், விஜய் உள்பட அனைத்து சினிமா பிரபலங்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம்

ஹரி-அருண்விஜய் படத்தில் இணைந்த 'அசுரன்' நடிகை!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 'அசுரன்'. இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து இருந்த நடிகை

விவசாயிகள் பிரச்சனை: கருத்து சுதந்திரம் குறித்து விராத் கோஹ்லியின் கருத்து!

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தாலும் அந்த போராட்டத்தை கண்டு கொள்ளாத திரைஉலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பாப் பாடகி ரிஹானாவின்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் எதிர்க்கட்சி நாடகமாடுகிறது- தமிழக முதல்வர் காட்டம்!

தமிழகச் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் உரை நிகழ்த்தினார்.

அதிர்ஷ்டக்காத்து என்றால் இதுதானா? கொடுத்தது 7 லட்சம் ஆனால் கிடைச்சது 2 கோடி?

பழங்கால நாணயத்தின் மீது ஆர்வம் உள்ள ஒரு நபர் கனடாவில் ஒரு பழைய பண்ணை வீட்டை விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்.