முதன்முதலாக சசி படத்தில் இணையும் 2 பிரபலங்கள்

  • IndiaGlitz, [Thursday,May 05 2016]
விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கிய 'பிச்சைக்காரன்' திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பேராதரவால் நல்ல வசூலை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இந்த படம் 50வது நாளை கடந்துள்ள நிலையில் சசி இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சசியின் அடுத்த படத்தில் முதன்முதலில் இளையதலைமுறை நடிகர்களான சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணையவுள்ளனர். இந்த படத்தை பல வெற்றிப்படங்களை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த தகவல் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சமூக இணையதள பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் தற்போது 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அவர் 'புரூஸ்லீ' மற்றும் 'கடவுள் இருக்குறான் குமாரு' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே போல் 'ஜில் ஜங் ஜக்' படத்தை அடுத்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் சித்தார்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முதல்நாளிலேயே இளையதளபதியுடன் இணைந்த சதீஷ்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படமான 'விஜய் 60'...

விஷாலின் 'கத்திச்சண்டை' எப்போது முடியும் தெரியுமா?

விஷால் நடித்த 'மருது' மற்றும் 'மதகஜராஜா' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்த ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் விஷால் அடுத்து சுராஜ் இயக்கத்தில்...

ஆகஸ்ட்டில் கமல்ஹாசனின் அடுத்த படம்

உலக நாயகன் கமல்ஹாசன், மகள் ஸ்ருதிஹாசனுடன் முதன்முதலில் நடிக்கவுள்ள 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு வரும் 16ஆம்...

நயன்தாராவுக்கு இதுதான் முதல்முறை

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல்வேறு கெட்டப்புகளில்...

ஜூன் 8 முதல் மேலும் ரூ.100 கோடி வசூல் செய்ய காத்திருக்கும் 'பாகுபலி'

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான 'பாகுபலி' திரைப்படம் ஏற்கனவே ரூ.600 கோடி வசூல் செய்து தென்னிந்தியாவில் மிக அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த படம் மேலும் ரூ.100 கோடியை வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது....