'இன்று நேற்று நாளை' 2ஆம் பாகத்தில் சிவகார்த்திகேயன்?

  • IndiaGlitz, [Monday,March 28 2016]

'ரஜினிமுருகன்' சூப்பர் ஹிட்டை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெமோ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் இந்த படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'தனி ஒருவன்' இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்பதை பார்த்தோம். தற்போது சிவகார்த்திகேயன் மேலும் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ரவிகுமார் இயக்கிய 'இன்று நேற்று நாளை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாக அப்போதே செய்தி வெளிவந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் அவர் இணையும் இந்த படம் 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.