சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ ரகுகணேஷ் கைது: கொலை வழக்காக பதிவு

தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர்களின் லாக்கப் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட் உத்தரவின்படி சிபிசிஐடி போலீசார் இன்று இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நேரடியாக சாத்தான்குளம் சென்று விசாரணையை தொடங்கினர்

முதல்கட்ட விசாரணை முடிந்தபின்னர் சாத்தான்குளம் போலீஸ் நிலைய, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர். எஸ்.பி. அலுவலகத்திற்கு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் செல்லவில்லை என்றும், எஸ்.ஐ. ரகுகணேஷ் மட்டும் சென்றதாகவும், அவரிடம் விசாரணை செய்தபின்னர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் இந்த வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் உள்பட மொத்தம் 6 போலீசார் மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எஸ்.ஐ.ரகுகணேஷ் கைது நடவடிக்கையை அடுத்து மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இன்று இரவுக்குள் அனைவரும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

More News

உங்க உடம்புல செல்போனை வைக்கக் கூடாத 10 ஆபத்தான இடங்கள் பற்றி தெரியுமா???

மனிதர்களின் ஆறாம் விரலாக மாறிவிட்ட செல்போன் இல்லாத மனிதரைத் தேடித்தான் பிடிக்க வேண்டும் என்ற நிலைமைக்குத் மனித சமூக தள்ளப்பட்டு இருக்கிறது.

'துளி கூட நல்லவன் கிடையாது': 'மாஸ்டர்' கேரக்டர் குறித்து மனம் திறந்த விஜய்சேதுபதி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் கொரோனா வைரஸ் பிரச்சினை முடிந்தவுடன் திரை அரங்குகள் திறந்த உடன் வெளியாகும்

திடீரென காலியான பிரதமர் மோடியின் 'வெய்போ' அக்கவுண்ட்: என்ன காரணம்?

சீனாவின் 'வெய்போ' என்ற சமூக வலைதளம் டுவிட்டருக்கு இணையானது என்பதால் அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தனது அக்கவுண்ட்டை தொடங்கினார்.

டிக்டாக் தடை குறித்து இலக்கியாவின் அதிரடி கருத்து!

டிக் டாக்கில் புகழ் பெற்ற இலக்கியா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாச பதிவுகளை டிக்டாக்கில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்பது தெரிந்ததே.

காரில் மது பாட்டில்கள் கடத்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கைது

உலகின் வயதான ஹீரோ என்ற புகழ்பெற்ற நடிகர் சாருஹாசன் கதாநாயகனாக நடித்த 'தாதா 87' என்ற திரைப்படத்தை எடுத்த தயாரிப்பாளர் மது கடத்தல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பது கோலிவுட் திரையுலகில்