வெளிநாட்டில் இருக்கும் கேப்டன் மகனை போட்டோஷூட் எடுத்த பிரபல இயக்குனரின் மகன்

  • IndiaGlitz, [Saturday,May 02 2020]

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஏற்கனவே ‘சகாப்தம்’ மற்றும் ‘மதுரை வீரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. தற்போது அவர் ‘மித்ரன்’ என்ற அதிரடி ஆக்சன் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சண்முகப்பாண்டியன் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருப்பதால் இதற்காக உடல்தகுதி பெற நெதர்லாந்து சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்

இந்த நிலையில் திடீரென கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சண்முகப்பாண்டியன் நெதர்லாந்தில் சிக்கி கொண்டார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் பார்த்திபனின் மகன் ராக்கி பார்த்திபன் ஃபேஸ்டைம் மூலம் சண்முகப்பாண்டியனை போட்டோஷூட் எடுத்துள்ளார். ஆன்லைன் மூலம் வீடியோ மூலம் எடுக்கும் இந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சண்முகப்பாண்டியனும் ராக்கி பார்த்திபனும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் இணைந்து இந்த இந்த போட்டோஷூட்டை எடுத்துள்ளனர் என்பதும் இந்த போட்டோக்கள் சண்முகப்பாண்டியனின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யபப்ட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்தின் 'கண்ணான கண்ணே' பாடலை இசைத்த பிரபலத்தின் மகள்!

அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடல் பட்டிதொட்டியெங்கும்

தமிழகம் முழுவதும் கொரோனாவை பரப்பிய கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட் சென்றால் சலுகை விலையில் அனைத்து காய்கறிகள், பழங்கள் கிடைக்கும் என்று எண்ணி சென்ற பொதுமக்கள், சமூக இடைவெளியை பின்பற்றாததால் தற்போது கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர்.

சென்னையில் 28 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத 7 பகுதிகள்!

சென்னையில் அதிகமாக கொரோனா வைரஸ் பரவும் பகுதி என 7 பகுதிகளை கண்டறிந்த அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட

ஒரே தெருவில் 19 பேர்களுக்கு கொரோனா: சென்னையில் பரபரப்பு

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும்,

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கு உத்தரவும், ஏப்ரல் 14ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது