ஸ்ருதிஹாசன் தயாரிக்கும் 'த மஸ்கிட்டோ பிலாஸபி '

  • IndiaGlitz, [Thursday,June 21 2018]

நடிகையும் கமல்ஹாசன் மகளுமான ஸ்ருதிஹாசன் தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’என்ற படத்தை தயாரித்து வெளியிடுகிறார். இந்த படத்தை ‘லென்ஸ்’ பட புகழ் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை உருவாக்கி, அதில் தன் பாணியிலான பயணத்தைத் மேற்கொண்டு, பல மரபுகளை உடைத்தெறிந்து, புதிய வடிவத்தை உருவாக்கி கலை சேவை செய்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரின் வித்தியாசமான தேர்வு தான் லென்ஸ் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவரின் இயக்கத்தில் உருவாகும் இந்த ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ என்ற படத்தை தன்னுடைய சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் தயாரித்து வெளியிடுகிறார் ஸ்ருதிஹாசன்.

‘லென்ஸ்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் ஏராளமான பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அத்துடன் இவரது படத்தைப் பார்த்த அனைவரும் இவரின் கதை சொல்லும் பாணியை வெகுவாக ரசித்து பாராட்டினர். அதிலும் குறைவான கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு, தேவையான கருவிகளின் உதவியை மட்டும் பயன்படுத்திக் கொண்டு, எளிமையான பாணியில் கதையை சொல்வதில் தேர்ச்சிப் பெற்றவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு திரை ஆர்வலர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் ஏற்பட்டிருந்தது. இந்த படத்திலும் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், குறைவான கதாப்பாத்திரங்களைக் கொண்டு உச்சபட்ச எளிமையான கதை சொல்லும் பாணியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறாராம்.

இந்த படத்தின் கதை தமிழில் சொல்லப்பட்டிருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் வகையிலேயே இது படமாக்கப்படவிருக்கிறது. ஏனெனில் திரைக்கதை , வசனம் மற்றும் குறைந்த பட்ச தொழில்நுட்ப கருவிகளால் ஒரு உண்மையான காட்சியை திரையில் பிரதிபலிக்க முடிவதில்லை.

இந்நிலையில் படத்தைப் பற்றி இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் பேசும் போது,‘ உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள்,தாங்கள் உருவாக்கும் கலை படைப்பை முடிந்தவரை பார்வையாளர்களுக்கு உண்மைக்கு அணுக்கமாக இருக்கும் வகையில் உருவாக்குவதற்காகத்தான் கடினமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’, உண்மையான வாழ்க்கை மற்றும் அதன் உண்மையான நேர விவரத்துடன் கூடிய விவரிப்பாக தயாராகவிருக்கிறது. இதில் நான்கு நண்பர்களின் கதையின் மூலம் இந்த சமூகம் எப்படி பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீனத்தின் எழுச்சியையும் எதிர்கொள்கிறது என்பதை தங்களுக்குள்ளேயே ஒரு விசாரணையின் மூலம் விவாதித்துக் கொள்கிறது. அதாவது திரைக்கதை, வசனங்கள் இல்லாமல் சிறிய வழி உரையாடலுடன் கூடிய அடிப்படை யோசனையைப் பற்றிய படமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பின் போது, ஒரு படைப்பாளியின் சுதந்திரமான தன்னிச்சையான அதிகாரத்தை உணர முடிந்தது. இதனால் சிறிய தருணங்கள் கூட உண்மையுடன் கூடிய உயிர்ப்புள்ளதாக்கியது.’ என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நிறுவனத்தைப் பற்றி அவர் பேசும் போது,‘ இது எப்படி நடந்தது என்று நினைத்துப் பார்க்கும் போது எனக்கு கனவாகத்தான் தெரிகிறது. நான் சரிகா மேடத்துடன் ஒரு நிமிடம் தான் பேசினேன். அவர்கள் என்னுடைய திறமையை உணர்ந்து கொண்டு இந்த நிறுவனத்தில் உடனடியாக வாய்ப்பளித்தார்கள். என்னுடைய திறமை மற்றும் சினிமா பற்றிய என்னுடைய கோணத்தின் தன்மையை நம்பும் ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். உலக சினிமாவின் மொழியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த படைப்பில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதமும் கொள்கிறேன். உலகம் முழுவதும் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’யை நல்லவிதமாக வரவேற்பார்கள் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம். உலக முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் எமது பயணத்தை பகிர்ந்து கொள்ளவும் காத்திருக்கிறோம்.’ என்றார்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளரான நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில்,‘ எங்கள் நிறுவனமான இஸிட்ரோ, எப்போதும் புதுமையான சுவராசியமான உள்ளடக்கங்களைத்தான் நம்புகிறது. இது பல்வேறு ஆக்கப்பூர்வமான வடிவங்களைக் கொண்டதாக இருக்கிறது. அத்துடன் உலகத்தரத்திலான கதை சொல்லலையும் இது கொண்டிருக்கிறது. நாங்கள் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ கதையை கேட்டதும், இயக்குநரை பாராட்டினோம். அத்துடன் அவரின் முந்தைய படைப்பான லென்ஸை பார்த்து வியந்தோம். எளிய கதைகளை ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்துவதில் அவரின் பார்வையைக் கண்டு ஆச்சரியமடைந்தோம். இந்த வழக்கமான சிந்தனை பணிபுரியும் போது சவாலை கொடுக்கும் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறோம். இதனை இசிட்ரோ மூலம் வழங்குவதில் பெருமையடைகிறோம். அவருடன் தொழில் முறையிலான உறவு நீடிக்கும் என்றும் நம்புகிறோம்.’ என்றார்.

More News

மும்தாஜை கதறி அழவைத்த செண்ட்ராயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதன் புரமோ வீடியோவை தான் நெட்டிசன்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் போல் தெரிகிறது. அதற்கு கிடைக்கும் ஆதரவும் பதிவு செய்யப்படும் கமெண்ட்டுகளும் இதனை உறுதி செய்கிறது.

ஆரவ்வுடன் மீண்டும் காதலா? வைரலாகும் ஓவியா புகைப்படம்

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக  வேண்டுமானால் ஆரவ் இருக்கலாம்

தளபதி விஜய் மகன் சஞ்சயின் திரையுலக திட்டம்

தளபதி விஜய் பிறந்த நாள் நாளை அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விஜய் தனது குடும்பத்தினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம்.

தற்கொலை செய்து கொள்ள போகிறேன்: பிக்பாஸ் வீட்டில் கதறும் மும்தாஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதி, முதல் பகுதி போல் விறுவிறுப்பாக இல்லை என்றும், போட்டியாளர்கள் தேர்வு சரியில்லை என்றும் நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில் அது உண்மை

வீரப்பனை பிடித்த ஐபிஎஸ் அதிகாரிக்கு காஷ்மீரில் முக்கிய பணி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் பாஜக தனது ஆதரவை விலக்கி கொண்டதால் மெகபூபா முப்தி ஆட்சி முடிவுக்கு வந்தது. மேலும் அம்மாநிலத்தில் தற்போது ஆளுனர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டுள்ளது