ரொமான்ஸ் எல்லாம் முடிஞ்சு போச்சு.. கதவை சாத்திய ஸ்ருதிஹாசன்.. !

  • IndiaGlitz, [Tuesday,May 28 2024]

நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ’இனிமேல்’ என்ற ரொமான்ஸ் ஆல்பத்தை வெளியிட்ட நிலையில் அவருடைய அடுத்த ஆல்பத்தில் ’கதவை சாத்தி விட்டேன், இனிமேல் எனக்கு சாவி தேவை இல்லை’ என்ற பாடல் வரிகள் இருப்பதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருக்கும் நிலையில் ஸ்ருதிஹாசனின் அடுத்த ஆல்பம் காதல் தோல்வி ஆல்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் இருவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை நீக்கி உள்ளனர்.

இந்த நிலையில் ’இனிமேல்’ என்ற ஆல்பத்தை அடுத்து தற்போது அவர் சில தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அடுத்த ஆல்பத்திற்கு அவர் தயாராகி வருவதாக தெரிகிறது.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’கதவை சாத்தி விட்டேன், சாவியை வெறுக்கிறேன் என்ற பாடல் வரிகளை குறிப்பிட்டுள்ளார். மீண்டும் பாடல் எழுத ஆரம்பித்து விட்டேன் என்றும் அவர் கூறியுள்ள நிலையில் இந்த ஆல்பம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் சில வரிகளை பாடி, பாடலுக்கு கம்போஸ் செய்துள்ள வீடியோவை வெளியிட்ட நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்துள்ளது.

மேலும் ஸ்ருதிஹாசனின் இந்த பதிவுக்கு ’ நீங்க ஒரு ராக் ஸ்டார், எதற்கும் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும், இதுவும் கடந்து போகும்’ என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

More News

இரட்டை வேடம் இல்லை.. அதுக்கும் மேல.. 'கோட்' படத்தின் ட்விஸ்ட்.. ரசிகர்கள் குஷி..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த படத்தில் அவர் தந்தை - மகன் என இரட்டை வேடங்களில் நடித்து இருப்பதாக கூறப்பட்டது.

இந்திய திரையுலகில் யாரும் வாங்காத சம்பளமா? அட்லியை வளைத்து போட்ட அஜித் பட நிறுவனம்..!

அஜித் படத்தை தயாரித்து வரும் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இதற்காக அட்லிக்கு இந்நிறுவனம் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பேசி முடித்திருப்பதாகவும் கூறப்படுவது

வீட்டில் பாம்பு வந்தால் - நல்லதா? கெட்டதா? தெளிவுபடுத்தும் ஸ்வாமி முரளி கிருஷ்ணா!

பிரபல ஆன்மீக சிந்தனையாளர் ஸ்வாமி முரளி கிருஷ்ணா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், வீட்டில் திடீரென பாம்பு வந்து விடுவது பற்றியும்,

மீண்டும் தள்ளிப்போகிறதா 'தங்கலான்' ரிலீஸ்? கமல், தனுஷ் காரணமா?

விக்ரம் நடித்த 'தங்கலான்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே ரிலீசுக்கு தயாரான நிலையில் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்து

இந்தியில் ரீமேக் ஆகும் மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படம்.. பாலிவுட் ரசிகர்கள் ஏற்பார்களா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வீடியோ ஒன்றும் வெளியான நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில்