'வேதாளம்' படத்தில் இருந்து விடைபெற்றார் ஸ்ருதிஹாசன்

  • IndiaGlitz, [Wednesday,October 07 2015]

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்கள் என்றால் அனைவருக்கும் அஜீத் மற்றும் விஜய் பெயர்கள்தான் ஞாபகம் வரும். இவர்களில் ஒருவருக்கு ஜோடியாக நடிப்பதே பெரிய விஷயம் என முன்னணி நடிகைகள் கருதி வரும் நிலையில் இருவரது படங்களில் நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்றவர் உலக நாயகனின் வாரிசு நடிகை ஸ்ருதிஹாசன்.

இளையதளபதி விஜய்யுடன் ஸ்ருதிஹாசன் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதிலும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வரும் தீபாவளி தினத்தில் அஜீத்துடன் அவர் நடித்த 'வேதாளம்' திரைப்படம் ரிலீசாக உள்ளது.

'வேதாளம்' படத்தில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்றுடன் முடிந்துவிட்டதாகவும், படக்குழுவினர்களிடம் இருந்து நேற்று ஸ்ருதிஹாசன் விடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடித்தது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறிய ஸ்ருதிஹாசன், 'வேதாளம் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தின் மூலம் பாசிட்டிவ் அனுபவங்களும் பெரும் மகிழ்ச்சியும் எனக்கு கிடைத்தது' என்று கூறி விடைபெற்றார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 'தல' தரிசனத்திற்காக அஜீத் ரசிகர்கள் இன்று நள்ளிரவு வரை விழித்திருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது.

More News

'த்ரிஷ்யம்' இயக்குனரின் ரீமேக் படத்தில் அருள்நிதி-ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆன படமான 'த்ரிஷ்யம்' படத்தை இயக்கிய ஜீத்துஜோசப், கடந்த 2013ஆம் ஆண்டு இயக்கி வெளிவந்த திரைப்படம் 'மெமோரிஸ்'...

பேய் வேடத்தில் நடிக்கும் சந்தானம் நாயகி

கடந்த இரண்டு வருடங்களாக கோலிவுட் திரையுலகை பேய் பிடித்து ஆட்டி வருகிறது. டார்லிங், காஞ்சனா 2, டிமாண்ட்டி காலனி முதல் 'மாயா'...

'தல 57' படத்தை இயக்கும் சூர்யா இயக்குனர்?

தல அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அல்லது நாளை முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது...

இசைஞானியுடன் இணைவாரா இமான்?

1000 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து உலக சாதனை செய்துள்ள இசைஞானி இளையராஜா...

அஜீத்துடன் மீண்டும் இணையும் 'வீரம்' நடிகர்

அஜீத், திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி மோட்டார் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராபி, சமையல் என பல்வேறு திறமைகளை உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே...