நாளை காய்கறி கடைகள் திறக்கலாம்: அரசின் அறிவிப்பால் கோயம்பேடு வியாபாரிகள் மகிழ்ச்சி!

  • IndiaGlitz, [Saturday,May 29 2021]

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு ஒரு வாரம் அமல்படுத்தப்பட்ட நிலையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டதாக நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்.இதனால் ஜூன் 7 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காய்கறி வியாபாரிகளின் கோரிக்கையை அடுத்து நாளை ஒரு நாள் மட்டும் கோயம்பேடு காய்கறி கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை ஞாயிறு அன்று கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழங்கள், பூ மார்க்கெட்டில் கடை திறக்கப்படும் என்றும் இந்த கடைகள் பகல் 12 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏற்கனவே வாகனங்கள் மூலம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காய்கறி பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது வாகனங்களில் காய்கறிகள் வாங்க முடியாதவர்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் கோயம்பேடு சந்தை கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

செல்ல நாய்க்கு பிறந்த நாள் கேக் ஊட்டிய கேப்ரில்லா: வைரல் வீடியோ

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா என்பதும் அவர் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து

இந்த குளத்தில் கல்லெரிந்தவர்கள் எறியட்டும்: வைரமுத்து விருது சர்ச்சை குறித்து பாரதிராஜா!

சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒன்.என்.வி என்ற விருது அறிவிக்கப்பட்டது. அதன்பின் திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுப்பிய எதிர்ப்பு காரணமாக அந்த விருது வைரமுத்துவுக்கு

நயன்தாரா படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ்சிவன்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை அடுத்து அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது 

ரூ.3 கோடி முதல் ரூ.30 லட்சம் வரை: நடிகை சாந்தினி கும்பல் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கம்!

தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை சாந்தினியை யார் என்றே தெரியாது என்றும், அவரை நான் பார்த்ததே இல்லை என்றும் அவரது கும்பல் தன்னிடம் ரூபாய் 3 கோடி வரை கேட்டு மிரட்டியதாகவும்

கொரோனாவுக்கு பலியான தமிழ் நடிகர்-தயாரிப்பாளர்: அதிர்ச்சியில் திரையுலகம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே பல திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து காலமாகி வருவது திரையுலகினர்க்ளை மட்டுமின்றி ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.