10வது மாடியில் விஐபிக்கள், பரதேசி போல் நடுரோட்டில் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள்

  • IndiaGlitz, [Tuesday,March 13 2018]

கடந்த சில நாட்களாகவே காவல்துறையை சேர்ந்தவர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து அனைவரையும் அதிர்ச்சி அளித்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னையில் இரண்டு காவல்துறையை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் காவலர் ஒருவர் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள ஆடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை கிண்டி அருகே உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் 10வது மாடியில் விஐபிக்கள் சொகுசு அறையில் தங்கியிருப்பதாகவும், அவர்களுக்காக பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் தங்குவதற்கு கூட இடமின்றி சாலையில் பரதேசி போல் படுத்து தூங்குவதாகவும் அவர் அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகிகளிடம் கேட்டபோது காவல்துறை உயரதிகாரிகளிடம் இருந்து உங்களுக்கு வசதி செய்து கொடுக்க எந்தவித தகவலும் வரவில்லை என்று பதில் வந்ததாம். பத்தாவது மாடியில் தங்கியிருக்கும் விஐபிக்களுக்கு பாதுகாப்பு எதற்கு? அப்படியே பாதுகாப்பு கொடுப்பதென்றாலும் அதற்குரிய வசதிகள் காவலர்களுக்கு செய்து தரவேண்டாமா? போலீஸ் என்ன நாயா? அல்லது பிச்சைக்காரனா? காவலர்கள் பலருக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக கூறப்படும் நிலையில் இதுவும் ஒரு மன அழுத்தத்திற்கான காரணம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்' என்று அந்த காவலர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

விக்ரம் மகனுடன் மகள் நடிப்பது உண்மையா? கவுதமி விளக்கம்

சீயான் விக்ரம் மகன் துருவ், இயக்குனர் பாலா இயக்கி வரும் 'வர்மா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கமல் கட்சியில் இணைகிறாரா தமிழிசை?

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

ஆதார் எண்ணை இணைக்க புதிய காலக்கெடு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட ஆதார் எண்ணை, வங்கி எண், மொபைல் எண் உள்பட பல்வேறு ஆவணங்களில் இணைக்க மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன.

திரையுலக செண்டிமெண்டுக்களை அடித்து நொறுக்கிய சூர்யா-கார்த்தி

திரையுலகம் மட்டுமின்றி பொதுவாக அனைத்து துறையினர்களும் ஒரு புதிய காரியத்தை தொடங்கும்போது செவ்வாய்க்கிழமை தொடங்குவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள்

கார்த்தியின் அடுத்த படத்தில் காத்திருக்கும் ஆச்சரியம்

கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'கடைக்குட்டி சிங்கம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய அடுத்த படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கவுள்ளார்