வன்கொடுமை செய்து வீடியோ எடுத்தது உண்மைதான்: ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திருநாவுக்கரசு கூட்டாளி

  • IndiaGlitz, [Saturday,April 27 2019]

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை நயவஞ்சமாக பேசி, மயக்கி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த விவகாரத்தில் திருநாவுக்கரசு உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது

இந்த் நிலையில் திருநாவுக்கரசு கும்பலின் கூட்டாளியான மணிவண்ணன் என்பவர் சமீபத்தில் சரண் அடைந்த நிலையில் அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை செய்தபோது அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த விசாரணையில், 'திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரோடு சேர்ந்து நானும் திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்தேன்'' என்று மணிவண்ணன் ஒப்புதல் வாக்கு மூலமாக அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை அடுத்தே திருநாவுக்கரசு உள்பட ஐந்து பேர் மீது சிபிசிஐடி போலீசார் தற்போது புதிய எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இந்த புதிய எப்.ஐ.ஆரில் பாலியல் வன்கொடுமை பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளதால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவகளுக்கு ஆயுள்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

More News

மோதல் எதிரொலி: தயாரிப்பாளரை சங்கத்தை பொறுப்பேற்ற தமிழக அரசு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கும் ஒரு பிரிவினர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டதால்

ஐஏஎஸ் தேர்வில் சாதனை செய்த பெண்ணை சந்தித்த கமல்!

ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்விஸ் தேர்வு என்று கூறப்படும் ஐஏஎஸ் தேர்வில் பலர் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த ஆண்டு கேரள மாநிலத்தை சேர்ந்த வயநாடு பகுதியின் பழங்குடியின பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்

சிறுமியை கற்பழித்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த 12ஆம் வகுப்பு மணவன்

திண்டுக்கல் அருகே 7ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், அந்த சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய 20 ரூபாய் நோட்! பழைய பணம் செல்லுமா?

ரிசர்வ் வங்கி ஏற்கனவே, ரூ.2000 ,ரூ. 500 , ரூ.200 , ரூ.100 , ரூ.50 , ரூ.10 ஆகிய புதிய பணங்களை அறிமுகம் செய்துள்ள நிலையில்...

16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் உறவு கொண்டால் நடவடிக்கை வேண்டாம்: உயர்நீதிமன்றம் ஆலோசனை

16 வயதுக்கு மேல் உள்ள ஆண், பெண் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் அவர்கள் மீது போக்சோ சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்