ராஜ்குந்த்ரா ஆபாச பட விவகாரம்: ஷில்பா ஷெட்டி எடுத்த அதிரடி முடிவு?

  • IndiaGlitz, [Tuesday,August 31 2021]

ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கணவர் ராஜ்குந்த்ராவை ஷில்பா ஷெட்டி பிரிய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ராவுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜ்குந்த்ரா திடீரென கடந்த மாதம் 19ஆம் தேதி ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருடைய கைதுக்கு பின்னர் தான் ராஜ்குந்த்ரா இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார் என்று ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்தது என்றும் இதனை அடுத்து அவர் தனது கணவரிடம் போலீசார் முன்னிலையில் கடுமையாக விமர்சனம் செய்ததாகவும், போலீசார் தான் கணவன் மனைவி இடையே வாக்குவாதத்தை தீர்த்து வைத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ராஜ்குந்த்ரா விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே வருவதாலும் அவருக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதாகவும் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜ்குந்த்ராவை நிரந்தரமாக பிரிய ஷில்பா ஷெட்டி முடிவு செய்துவிட்டதாகவும் குழந்தைகளுடன் அவர் தனியாக வாழ முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஷில்பா ஷெட்டியிடம் இருந்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஷில்பா செட்டி தற்போது படவாய்ப்புகள் மட்டுமின்றி தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார் என்பதால் அவருக்கு நல்ல வருமானம் வருகிறது என்றும் ராஜ்குந்த்ரா சம்பாதித்த பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தனக்கு வேண்டாம் என்று உறுதியாக கூறி விட்டதாகவும் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

ஆரம்பிக்கலாமா? பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் முதல் புரமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இன்று மாலை 5.55 மணிக்கு விஜய் டிவியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

'மங்காத்தா டா': மகத் பதிவு செய்த டுவிட்!

தல அஜித் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மங்காத்தா' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து ரசிகர்கள் அதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி

தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரர் திடீர் ஓய்வு… ரசிகர்கள் அதிர்ச்சி!

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி நட்சத்திர வீரராக வலம்வரும் டேல் ஸ்டெய்ன் அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வுப்பெறுவதாக

தாலிபான்களுக்கு ஆதரவாக பேசிய பிரபல கிரிக்கெட் வீரர்… வச்சுசெய்யும் நெட்டிசன்ஸ்!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி ஆல்ரவுண்டராக விளையாடி வந்தவர் ஷாகித் அஃப்ரிடி. பாக்.

தனது நிர்வாணப் புகைப்படத்தை ஷேர் செய்த சிறுமி… அதிர்ச்சியில் பெற்றோருக்கு நடந்த விபரீதம்!

குஜராத் மாநிலத்தில் சிறுமி ஒருவர் தன்னுடைய நிர்வாணப் புகைப்படத்தை தானே இணையத்தில் பதிவிட்டு உள்ளார்.