யார் இந்த சேகர் ரெட்டி? வருமான வரித்துறையினர்களிடம் சிக்கியது எப்படி?

  • IndiaGlitz, [Thursday,December 22 2016]

பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்திய வருமான வரித்துறையினர்களின் சோதனையில் ரூ.131 கோடி ரொக்கமும், 171 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சேகர் ரெட்டி மற்றும் அவரது சகாவான சீனிவாசலு ஆகியோர் மீது 3 பிரிவிகளின் கீழ் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில்ல் சேகர் ரெட்டியும், சீனிவாசலுவும் நேற்று கைது செய்யப்பட்டு ஜனவரி 3ஆம் தேதி வரை காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜெ.சேகர் ரெட்டி. இவர் தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்ததராகவும், கட்டுமான தொழிலும் செய்து வந்தார். மேலும் தமிழகத்தில் ஆற்று மணல் குவாரிகளை, சேகர் ரெட்டி தனது நிறுவனத்தின் மூலம் நடத்தி வந்தார். ஆட்சியாளர்களுக்கும் போயஸ் கார்டன் வட்டாரங்களுக்கும் நெருக்கமானவர் என்று கூறப்படும் இவர் திருப்பதி அறங்காவலர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இந்த பதவிக்கு இவர் தமிழக அரசினால் பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரு.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் சேகர் ரெட்டி கமிஷன் அடிப்படையில் மாற்றி கொடுப்பதாகவும், ஏராளமான ரொக்கப் பணத்தை பதுக்கிவைத்திருப்பதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.

இதுகுறித்து விசாரணை செய்யவே வருமான வரித்துறையினர் அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்தனர். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல் இந்த சோதனையில், கோடிக்கணக்கான பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள், கோடிக்கணக்கான மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஏராளமான முக்கிய ஆவணங்கள் சிக்கியது. அதுமட்டுமின்றி பல அரசியல்வாதிகள் மற்றும் உயர் அரசு அதிகாரிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சேகர் ரெட்டி வீட்டில் கிடைத்த முக்கிய ஆவணங்கள் அடிப்படையில்தான் நேற்று தலைமைசெயலாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், இந்த சோதனை தொடரும் என்றும் இன்னும் ஒருசில நாட்களில் இன்னும் ஒருசில அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் போயஸ் தோட்டத்திற்கு நெருக்கமானவர்கள் ஆகியோர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தமிழகம் மீண்டும் ஒரு பரபரப்பிற்கு தயாராகியுள்ளதாகவே தெரிகிறது.

More News

ஜெயலலிதா இறந்த தினத்தில் ராம்மோகன் ராவ் செய்தது என்ன? திடுக்கிடும் தகவல்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த தினத்தில் தமிழகம் மட்டுமின்றி நாடே சோகத்தில் மூழ்கிய நிலையில்...

தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளர் ஆன பெண் ஐஏஎஸ் அதிகாரி

தமிழகத்தின் தலைமைச்செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் நேற்று விடிய விடிய வருமான வரித்துறையினர் சோதனை...

சமந்தாவின் 'சாவித்திரி' கனவு என்ன ஆயிற்று?

கோலிவுட் திரையுலகின் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகை சமந்தா...

விஜய் சொன்ன ரெண்டு வார்த்தையே மிக அதிகம். கீர்த்திசுரேஷ்

மிக குறுகிய காலத்தில் இளையதளபதி விஜய், சூர்யா போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டக்கார நடிகை கீர்த்திசுரேஷ்...

கார்த்தியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

'காஷ்மோரா' படத்தின் பின்னர் கார்த்தி தற்போது பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிட'