close
Choose your channels

துலாபார நிகழ்ச்சியின்போது மண்டை உடைந்தது: காங்கிரஸ் வேட்பாளர் காயம்!

Monday, April 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சசிதரூர் துலாபார நிகழ்ச்சியின்போது காயமடைந்தார்.

திருவனந்தபுரம் தொகுதியின் வெற்றிக்காக கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சசிதரூர் சற்றுமுன் திருவனந்தபுரத்தில் உள்ள காந்தாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் எடைக்கு எடை அரிசி, பழம், சர்க்கரை ஆகியவை காணிக்கை வழங்கும் துலாபாரம் சடங்கில் கலந்து கொண்டார். இந்த துலாபார நிகழ்வின் போது எதிர்பாராத வகையில் எடை தராசு சசிதரூர் தலையில் விழுந்தது. இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது

உடனடியாக காயம் அடைந்த சசிதரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு 11 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான காயம் எதுவும் அவருக்கு இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூரை எதிர்த்து பாஜக வேட்பாளராக கும்மனம் ராஜசேகரன் என்பவரும் சி.பி.ஐ.(எம்) வேட்பாளராக திவாகரன் என்பவரும் போட்டியிடுகின்றனர். சசிதரூர் ஏற்கனவே இதே தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment