16 வயது சிறுமி பாலியல் வழக்கில் பாய்ந்த போக்சோ சட்டம்: ஷங்கர் மருமகன் எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Saturday,October 29 2022]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மருமகன் மீது 16 வயது சிறுமி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்ததால் அவர் தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் ரோகித் என்பவருக்கும் கடந்த 2001ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஷங்கரின் மருமகன் ரோஹித் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனும் மதுரை பாந்தா கிரிக்கெட் அணியின் உரிமையாளரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 16 வயது சிறுமிக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும்போது கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரையடுத்து ஷங்கரின் மருமகன் ரோகித் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் ரோகித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடி முடிவு ஒன்றை அறிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நான் மிகவும் ஆழமாக யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கிரிக்கெட் தான் எனக்கு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்தது. எனக்கு மிகப்பெரிய அறிமுகமாகவும் இருந்தது. என் வாழ்வின் முக்கிய அங்கமாக இருக்கும் கிரிக்கெட்டுக்கு நான் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

கடந்த சில மாதங்களாக நடந்த சம்பவங்கள் காரணமாக நான் மன அமைதியையும் என்னுடைய நன் மதிப்பை இழந்து இருக்கின்றேன். தற்போது மிகுந்த மன உளைச்சலில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் என்னை நானே மீண்டுவர தயார்படுத்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த நிலையில் தற்காலிகமாக நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறேன். என்னை உருவாக்கிய கிரிக்கெட்டிற்கும், என்னை நம்பி நின்ற அனைவருக்கும், அவதூறு நேரங்களில் கூட எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் நன்றி’ என்று பதிவு செய்துள்ளார்.

ஷங்கரின் மகன் திடீரென கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'இதை சொன்ன புறம்போக்கு மட்டும் என் கையில கிடைச்சான்.... 'நான் மிருகமாய் மாற' டிரைலர்

சசிகுமார் நடித்த 'நான் மிருகமாய் மாற' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த மாதம் அதாவது நவம்பர் மாதம்

ரூ.100 கோடி படமா இருந்தாலும் நல்லா இல்லைன்னா, நல்லா இல்லைன்னு சொல்லுங்க: கமல்ஹாசன்

ஒரு திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் அந்த படம் நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை என்று தைரியமாக விமர்சனம் செய்யுங்கள் என்று உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

திருமணமாகாத இரண்டு தமிழ் நடிகைகள் கர்ப்பம்? இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் பரபரப்பு!

திருமணமாகாத 2 தமிழ் நடிகைகள் தாங்கள் கர்ப்பம் என இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பதிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த 2  படங்கள்: உறுதி செய்த தயாரிப்பாளரின் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்

'பொன்னியின் செல்வன்' ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு: ரசிகர்கள் அதிருப்தி!

 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ஓடிடி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பால் ரசிகர்கள்